கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா, இனிவரும் காலங்களில் தான் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமது 5 தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் பல மைல்கற்களைக் கண்ட 79 வயதான சித்தராமையா, தற்போதைய அரசியல் சூழல் குறித்துத் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், "இன்றைய காலகட்டத்தில் தேர்தல் அரசியலில் ஊழல் மிகவும் அதிகரித்துவிட்டது. நேர்மையான அரசியலுக்குச் சுதந்திரமாகச் செயல்படும் சூழல் இல்லாமல் போய்விட்டது" என விமர்சித்துள்ளார்.

மேலும், "எனது தற்போதைய வயது மற்றும் தளர்ந்து வரும் உடல்நிலை காரணங்களால் இனிமேல் தீவிரத் தேர்தல் களத்தில் முன்னரைப் போல ஓடி ஆடிப் பணியாற்ற முடியாது. அதனால் 2028 சட்டமன்றத் தேர்தல் உட்பட இனி எந்தத் தேர்தலிலும் நான் போட்டியிடப்போவதில்லை. இருப்பினும், மீதமுள்ள எனது வாழ்நாள் முழுவதையும் எவ்வித பதவியையும் எதிர்பாராமல் மக்களின் நலனுக்காகவும் பொதுச்சேவைக்காகவும் மட்டுமே அர்ப்பணிப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!
கர்நாடக மாநில அரசியலில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் முதன்மை முகமாக விளங்கி, இருமுறை முதலமைச்சராகப் பதவி வகித்த சித்தராமையாவின் இந்தத் திடீர் ஓய்வு அறிவிப்பு, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் அம்மாநில அரசியல் வட்டாரத்திலும் மாபெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "வசனம் வேறு... ஆட்சி வேறு!" - த.வெ.க அரசை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!