தொகுதி மறு வரையறை விஷயத்தில் சில கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது, இந்திய அரசியல் அமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தையும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் ஒரு நீண்டகால போராட்டமாக வெளிப்படுகிறது.
இந்த எதிர்ப்பு 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறு வரையறை செயல்முறையை மையமாகக் கொண்டது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும் இந்த நடவடிக்கை, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் என்று திமுக கருதுகிறது.

தொகுதி மறு வரையறை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மறுநிர்ணயம் செய்யும் செயலாகும். இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய பாஜக அரசு இன்று தொகுதி மறு வரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கிறது. இதற்கு எதிராக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஊழலில் ஊறித் திளைத்து தமிழ்நாட்டை சுரண்டும் திமுக"..! ஆதவ் அர்ஜுனா விளாசல்..!!
இந்த நிலையில், தொகுதி மறு வரையறை சட்டத்திருத்தம் மசோதாவை ஆதரித்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வாக்கு செலுத்து இருப்பதாக அறிவித்துள்ளது. தெலுங்கு தேசம் பற்றி என் டி ஏ கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறது. 50 தொகுதிகளுக்கு மேல் எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கப்படாது என்றும் தொகுதி மறு வரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் கட்சியும் தொகுதி சீரமைப்பு விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: இப்படித்தான் ஓட்டு போடணும்..! மாதிரி EVM இயந்திரத்துடன் பரப்புரை...! Tvk நிர்வாகிகளின் புது முயற்சி..!