யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ஓய்வுபெற்றார். இந்த நிலையில், யுபிஎஸ்சி தலைவராக முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த அஜய் குமாரை நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

இவர் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவர், 1985ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
