குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சிக்னலை இழந்த நிலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் 230 பேர் பயணிகள், 2 விமானிகள், 10 ஊழியர்கள் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி பயணித்த நிலையில் அவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விஜய் ரூபாணியுடனான நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: சொந்த மண்ணில் கொடூரம்.. ஓடோடிச் சென்று பிரதமர் மோடி ஆய்வு.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

இது தொடர்பான அமித் ஷாவின் பதிவில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய்பாய் ரூபானியுடன் நீண்ட காலம் அந்த அமைப்பில் பணியாற்றினார். மாநிலத் தலைவராக அமைப்பை வலுப்படுத்துவதாக இருந்தாலும் சரி, முதலமைச்சராக குஜராத்தின் வளர்ச்சிப் பயணத்தை துடிப்பாக வைத்திருப்பதாக இருந்தாலும் சரி, விஜய்பாய் ஒவ்வொரு பொறுப்பையும் முழு பொறுப்புடன் நிறைவேற்றினார். அவர் இனி நம்மிடையே இல்லை என்பதை நம்புவது கடினம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் அரசு துணை நிற்கும்... நேரில் ஆறுதல் சொன்ன அமித்ஷா!!