குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி கடந்த 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தார். லண்டனுக்கு சென்று தனது மகள் ராதிகாவை சந்திக்கச் சென்றிருந்த அவர், புறப்படுவதற்கு சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகி இருப்பதால் டி என் ஏ பரிசோதனை நடத்தி உடல்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் விஜய் ரூபாணியின் டி என் ஏ ஒத்து போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது
இதையும் படிங்க: அடுத்தடுத்து நிகழும் விமான விபத்து... அவசரமாக லக்னோவில் தரை இறங்கிய விமானம்! பயணிகள் அச்சம்!

இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நடைபெற்ற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் விஜய் ரூபாணியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்ல...அமித்ஷா சொன்ன பரபரப்பு தகவல்!