குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் விடுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 200கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குஜராத்திற்கு அனுப்பி நிலைமையை கண்காணிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

பின்னர் தனி விமானம் மூலம் குஜராத் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டு நிலைமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷ் என்பவரையும், மேலும் விபத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் அமித்ஷா நலம் விசாரித்தார். அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: அதான் அவரே சொல்றாரே! மோடி, அமித்ஷா, ராம்மோகன் பதவி விலகணும்…நியாயம் பேசும் பாஜக மூத்த தலை!

பின்னர் இந்த விபத்து தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விபத்துக்குள்ளான விமானத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 230 பயணிகளும், 12 பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர். இவர்களில் 1 பயணி உயிர் பிழைத்ததாக எங்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. டிஎன்ஏ சோதனை மற்றும் பயணிகளை அடையாளம் கண்ட பின்னரே இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறினார்.

சம்பவம் நடந்த உடனேயே, குஜராத் அரசு அனைத்து பேரிடர் மேலாண்மை பிரிவுகளையும் எச்சரித்து மீட்புப் பணிகளைத் தொடங்கியது.விமானத்தில் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது. இதன் காரணமாக வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்ததால் யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை என்றும் அனைத்து பயணிகளின் உடல்களையும் அகற்றும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

அனைத்து பயணிகளின் டிஎன்ஏ எடுக்கும் பணி 2-3 மணி நேரத்தில் நிறைவடையும். வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது அமித் ஷா தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: குஜராத் விமான விபத்து... 170 பேர் உயிரிழந்த பேரதிர்ச்சி..