இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாகவும், இதற்கு 100% ஆதாரங்கள்" தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். இருப்பினும் எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மாறாக ராகுல் காந்தி ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியது.
இதையும் படிங்க: ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் பெரியார் உருவப்படம்! MP என்.ஆர் இளங்கோ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் அறிவிப்பு..!
இந்த நிலையில், குஜராத்திலும் வாக்குத்திருட்டு நடைபெற்ற உள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி புகாரை தெரிவித்துள்ளது. குஜராத் முழுவதும் 62 லட்சம் பூலி வாக்குகள் இருக்கலாம் என காங்கிரஸ் கணித்துள்ளது. குஜராத்தில் மட்டும் ஐந்து கோடி வாக்காளர்கள் உள்ளதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வாக்கு திருட்டு தொடர்பாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய போவதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஒரு தொகுதியில் மட்டும் 12.3% போலி வாக்காளர்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இரட்டை வாக்கு, போலி முகவரி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் வாக்கு திருட்டு விவகாரம்! தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாபெரும் மாநாடு