மத்திய கிழக்கு போர் பதற்றக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விற்பனை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படாததால், ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய அளிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 13 நாட்களில் 5வது முறையாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
தலைநகர் சென்னையில் நேற்று 2 ரூபாய் 46 காசுகள் உயர்த்தப்பட்டு 107 ரூபாய் 7 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக, அதாவது கடந்த 13 நாட்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 உயர்ந்து 108 ரூபாய் ஒரு காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று டீசல் 23 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த 15ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. இரண்டாவது முறையாக கடந்த மே 19ம் தேதி அன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை 79 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 104 ரூபாய் 46 காசுகளாகவும், டீசல் 86 காசுகள் அதிகரித்து 96.11 காசுககளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து 4வது முறையாக கடந்த 23ம் தேதி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 87 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் விலை இவ்வளவா?
தற்போது ஒட்டுமொத்த மக்களின் தலையிலும் பேரிடியை இறக்கும் விதமாக, 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 24 உயர்ந்து 108 ரூபாய் ஒரு காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று டீசல் 23 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிச்சயம் பாதிக்கும். ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குறுகிய இரண்டு வார கால இடைவெளியில் ஒட்டுமொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தோராயமாக ரூ.7.50 காசுகள் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Petrol Diesel Price Hike: விடிந்ததுமே ஷாக்...!! - இடியாய் இறங்கிய பெட்ரோல், டீசல் விலை உயர்வு... 10 நாட்களில் 3வது முறையாக உயர்வு...!