சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் அதிமுக நிலை முகவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:- வருகின்ற சட்டமன்ற த் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தின்7- தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். நம்மை எதிர்க்க திமுகவில் ஆளே இல்லை என்பதை உருவாக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து செயல்படுத்திய திட்டங்களுக்கு தான் இன்றைய தினம் திமுக திறப்பு விழா நடத்திக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் திமுக பொய் பிரச்சாரம் செய்து உண்மைகளை மறைக்க பார்க்கின்றோம். அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு விதை விதித்த கரு நாங்கள்தான். வளர்த்தது நாங்கள். பெயர் வைத்துக் கொண்டது நீங்கள்.
புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்றது அதிமுக ஆட்சியில் தான். உங்களால் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் மத்திய அரசில் ஆட்சியில் இருப்பது உங்கள் ஐயா இல்லை எங்கள் ஐயா. மோடி எங்கள் டாடி தான் உள்ளார்.
இதையும் படிங்க: சொன்னா கேளுங்க! விஜய்க்கு அதிமுக தான் பாதுகாப்பு... ராஜேந்திர பாலாஜி பிரஸ்மீட்...!
மாணிக்கம் தாகூர் எம்பியால் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா? ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதேபோல நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை. அதிமுக ஆளட்டும்- திமுக வாழட்டும். என்றுமே பெரிய கட்சி அதிமுக- திமுக தான். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக செய்யும் தில்லுமுல்லு தடி வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுவோம்.
அதிமுக ஆட்சியின்போது சிவகாசி மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் சிறப்பு நிகழ்ச்சி வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பாக புதிதாக வந்த திமுக எதுவுமே செய்யவில்லை. இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிவகாசி வட்ட சுற்றுச்சாலை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம். அதிமுகவின் கடைசித் தொண்டன் தொண்டன் இருக்கும் வரை திமுகவின் ஏமாற்று நாடகம் நடக்காது. திமுகவால் சுயமாக எதுவும் செய்ய முடியாது. டெல்லி திமுக சொல்வதை கேட்காது. மத்திய அரசு - அதிமுக இல்லாமலா? சிவகாசிக்கு ரயில்வே மேம்பாலம் வந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக ஆட்சியில் நடந்த ஊழலை மாற்றுவோம் விசாரிப்போம்.
அதிமுக ஆட்சி தவறு செய்யாது என்று நான் கூறவில்லை. சிறு சிறு தவறு நடந்தாலும் திமுக தவறை மட்டுமே செய்கிறது. தற்போதுள்ள அமைச்சர்கள் எம். பி.,எம். எல் ஏ., யாருமே மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அதிமுக தான் பல்வேறு செயல் திட்டங்களை விதைத்துள்ளது. தென் மாவட்டங்களை திமுக அரசு வஞ்சித்து வருகிறது. அதிமுக ஆட்சி தான் மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்தி தொழில்களை மேம்படுத்தியது. தமிழ்நாட்டிற்கு குடும்ப ஆட்சி வேண்டுமா? மக்கள் ஆட்சி வேண்டுமா? காட்டுக்கு வீட்டுக்கும் நல்லது நடக்க கைமாறு கருதாமல் களப் பணிகளை செய்யுங்கள். நமக்குள் கொடுக்கல் வாங்கல் நிறைய இருக்கிறது. என்றார்.
இதையும் படிங்க: கூட்டணிக்கு தவம் இருக்கோமா? அந்த அவசியம் அதிமுகவுக்கு இல்ல... ராஜேந்திர பாலாஜி காட்டம்...!