அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் தவெக அரசு தமிழ்நாட்டில் ரெஸ்ட்ரோ பார்களை திறக்கவுள்ளதாக வெளியான தகவலை வெளுத்து வாங்கியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: தடுமாறுகிறதா த.வெ.க அரசு,தடம் மாறுகிறதா த.வெக அரசு பற்றி எரிகிறது தமிழகம். தமிழகத்தில் 4000 மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் கோடிக்கணக்கான பணம் குடிகார்கள் மூலம் அரசுக்கு வருவாயாக ஈட்டப்படுவதை நாம் அறிந்த ஒன்றுதான். இந்த நிலையிலே டாஸ்மாக் நிறுவனம் தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள ஓட்டல்களில் ரெஸ்டோ பார்கள் செயல்பட அனுமதி வழங்க பரிசளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் எஃப் எல் 1 உரிமை டாஸ்மார்க் கடைகளுக்கும், எஃப் எல் 2 உரிமம் கிளப்புகளுக்கும், எஃப் எல் 3 உரிமம்நட்சத்திர தனியார் விடுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக குடிகாரர்களுக்கு இது போதாது என்று த.வெ.க அரசு நினைத்ததோ, என்னவோ, தெரியவில்லை தற்போது ரெஸ்டோ பர்களுக்கு தனி உரிமை வழங்க திட்டமிட்டு வருகிறதுத.வெ.க.அரசு.
மேலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக மாற்றம் செய்து அதற்கு பதிலாக உரிமம் பெற்ற ரெஸ்ட்ரோ பார்களை ஊக்குவிக்கவும் வாய்ப்பு அளிக்கும் வகையில் த.வெ.க அரசு அதிரடி காட்டுகிறது.
இதையும் படிங்க: சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!
மேலும் டாஸ்மார்க் கடைகளில் மது எண்ணிக்கையை அதிகப்படுத்த கூடுதலாக 54 புதிய உற்சாகமூட்டும் உயர்ரக மதுபானங்களை பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யவும் இதன் மூலம் டாஸ்மாக் நிர்வாகம் குடிகாரர்களை குஷிப்படுத்த அற்புதமான திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கிடைக்காத பல்வேறு பிராண்ட் பீர் மற்றும் மதுபான வகைகள் மது பிரியர்களுக்கு தங்கு தடை இன்றி கிடைக்கும் வகையில் இன்றைக்கு ஏற்பாடுகள தடபுடலாக நடந்து வருகிறது .
நடிகர் விஜய் மீது ஜென்சி தலைமுறையின் முரட்டுத்தனமான ஏன் குருட்டுத்தனமான ஆதரவால் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ள விஜய்யின் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்றவுடன் ,பொறுப்போடு ஜென்சி தலைமுறையின் வறுமையை ஒழித்து, வாழ்வாதாரத்துக்கு புதிய புதிய வேலைவாய்ப்புகள் காண திட்டங்களை உருவாக்கி, அற்புதத்தை அதிரடியாக நடத்திக் காட்டுவார்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவார்கள் என்று தமிழகம் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கிற போது, அசைக்க முடியாத ஜென்சி தலைமுறையின் நம்பிக்கையை இப்போது அசைத்துப் பார்க்கின்ற வகையிலே புதிய ,புதிய 54 ப பிராண்ட் மது வகைகளை அறிமுகம் செய்வதோடு ,மொத்தமாக குடும்பத்துடன் குடிப்பதற்கு வசதியாக ஒட்டுமொத்த கலாச்சார தமிழக குடும்பங்களையும் ,குடிகார குடும்பங்களாக மாற்றும் அதிரடி திட்டம்தான் இந்த ரெஸ்ட்ரோ பார்களை திறப்பது ஆகும்.
மாற்றத்தை எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு இந்த மாற்றத்தை பம்பர் பரிசாக அளிப்பதோடு ,அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளையும் கொடுத்து அசத்தப் போகிறார் நமது விஜய் எப்படி தெரியுமா? இனி டாஸ்மாக் கடையிலே சென்று மது வகைகளை வாங்குவதற்கும், குடிப்பதற்கு குடிகாரர்கள் எவ்வளவு விழுந்து கஷ்டப்படுவதா அவர்களின் கவலைகளையும் ,கஷ்டங்களையும் களைவதற்கு த.வெ.க அரசு புதிய மாற்றமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஆன்லைன் மூலமாக மதுபான விற்பனையை துவக்கி, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாயில் குடிதண்ணீர் வருகிறதோ இல்லையோ ,ஒவ்வொரு வீட்டின் குழாயின் மூலமாக டாஸ்மாக் தண்ணீரை தவறாமல் தருவதற்கு அரசு அதிரடியாக பரிசளித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது .
அரிசி விலையை கிலோவுக்கு ரூ. 20 ரூபாய் உயர்கிறபோது மதுபான விலை உயரதானே செய்யும். மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிய மக்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது த.வெ.க அரசு.ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது வெறும் கண் துடைப்பு தான் . இன்றைக்கு காட்டு தீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கிற பிரச்சனை எதுவானாலும் நாங்கள் எதுவும் பேச மாட்டோம் என்று சத்திய பிரமாணம் செய்திருக்கிறது த.வெ.க அரசு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரி வர்மன் குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மூன்று நாட்களிலே உயிரிழந்திருக்கின்ற ஈரம் காய்வதற்குள், சென்னை புழல் சிறையிலே கைதி பாலாஜி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள
நமக்கு நினைவுக்கு வருகிறது நினைவு இருப்பவர்களுக்கு தெரியும் கடந்த ஆட்சியிலே லாக்கர் டெத் மரணம் திருப்புவனம் அஜித் அவர்களுக்கு ஏற்பட்ட போது, விஜய் அரசுக்கு எதிராக அன்றைக்கு போராடிய போது ஸ்டாலின் சார் ஸ்டாலின் சார் எங்களுக்கு சாரி வேணாம் நீதிதான் வேண்டும். நாட்டிலே ஒவ்வொன்றிற்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வியை கேட்கணும்னா அப்புறம் சிஎம் பதவி உங்களுக்கு எதுக்கு ஸ்டாலின் சார் என்று காட்டு கூச்சல் போட்டு அதிரடி காட்டிய விஜய் த.வெ.க அரசிலே நடந்ததை கண்டு இப்போது மௌனம் அமைதி காத்து வருகிறார்.
இன்றைக்கு பழனியில் 100 கோடியில் கோயில் சொத்து தனியாருக்கு தலைவார்த்து த.வெக அரசின் தயாளா குணம்.ஆனால் 50 ஆண்டுகள் 60 ஆண்டுகளுக்கு மேலே குடியிருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களை ஈவு இரக்கமின்றி புல்டோசர் மூலமாக குடியிருக்கும் வீடுகளை தரைமட்டம் ஆக்கி தலைமுறையை அனாதையாக தவிக்க விடுகின்ற இந்த அரக்க குணத்தை ,இந்த அராஜக செயல் மூலம் விஜயின் அரக்க குணத்தை இப்போத தமிழகம் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
கரூரில் பத்திரிக்கையாளருக்கு அனுமதி இல்லை உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக தகர சீட்டு அடித்து அவர்களை வெளியேற்றி அரங்கோலக் காட்சி. புதிய தலைமுறை நெறியாளர் விஜயனை விசாரணைக்காக அழைத்துச் சென்று அலைக்கழிக்கின்ற அந்த அரக்க குணம் பத்திரிகையாவின் சுதந்திரத்தை விவகாரம் ஆக்கி இருக்கிறார் விஜய்.
இதைத்தான் அறிஞர் பிளாட்டோ சொன்னார். முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவன் செய்யும் முதல் செயல் நாட்டிலே இருக்கிற அறிவாளிகளை மௌனப்படுத்துவது, அடுத்த செயல் மற்ற முட்டாள்களை எல்லாம் தன்னோடு சேர்ப்பது, கடைசியிலே கடைசி செயல் நாட்டையே நாசம் செய்வது ஆகவே அறிவில்லாதவன் ஆட்சி செய்தால் முதலில் உண்மை ஒழியும் ,பின்னர் நீதி ஒழியும் ,இறுதியில் மக்கள் ஒழிவார்கள் அதுதான் தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது .ஜென்சி தலைமுறையே இனியாவது விழித்துக் கொள்ளுமா?விஜயின் இரட்டை வேடத்தை பார்த்து பொறுத்து இருந்து பார்ப்போம் என கூறினார்.
இதையும் படிங்க: “ரெண்டு அப்பா பெயரையும் சொன்னால் நாங்க கண்டுபிடிச்சி தர்றோம்...” - சி.எம். விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு...!