அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அதிமுக பொதுச்செயலாளர் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் முதலமைச்சராக வேண்டுமென மக்கள் விரும்பினர். ஆனால் திமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க எடப்பாடி திட்டமிட்டார். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக என்ற கட்சியே திமுக எதிர்ப்பில் பிறந்தது. நாம் திமுகவை கடுமையாக எதிர்த்த கட்சி. நாம் எப்படி திமுக உடன் கூட்டணி வைக்க முடியும். திமுக நம்முடைய கொள்கை ரீதியிலான எதிர்க்கட்சி. அப்படி இருக்க அவர்களுடன் எப்படி இணைய முடியும். அப்படி இருக்க அவர் திமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் எனக்கூறினார், அதனை நாங்கள் ஏற்கவில்லை. உண்மையைச் சொன்னால் பேரதிர்ச்சி அடைந்தோம் என்றெல்லாம் கூறினார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக ஐ.டி.விங்க் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பதிவில், சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!. திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?.
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?. அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?. பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
இதையும் படிங்க: திமுக மீது வீண்பழி..! அதிமுகவுடன் கூட்டணி முயற்சியா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?. 1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!. அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!. எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!. எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!. இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்! என பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “விஜய்க்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு... இனி பாஜக, NDA கூட்டணி கிடையாது” - இபிஎஸுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்த சி.வி.சண்முகம்...!