தேர்தலுக்கு இன்னும் சில நாட்களிலே இருக்கக்கூடிய நிலையில் கட்சிகள் எல்லாம் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்கள். ஆனால் பாஜக இதுவரை அறிவிக்காமல் இருந்து வருகிறது. அதற்கு காரணம் கோவை வடக்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் நிற்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அண்ணாமலையும் அந்த தொகுதியில் நிற்க விரும்புவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
என்னதான் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அண்ணாமலை சொன்னாலும் அவர் கோவை தொகுதியை குறிவைப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கோவையில் ஏதாவது ஒரு தொகுதி கவுண்டபாளையம் அல்லது சிங்காநல்லூர் போன்ற தொகுதிகளில் நிற்க அண்ணாமலை முயற்சி செய்தார். ஆனால் அந்த தொகுதிகளை அதிமுக பாஜகவிற்கு ஒதுக்கவில்லை. மாறாக கோவை வடக்கு தொகுதியை மட்டுமே பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட வானதி சீனிவாசன், அண்ணாமலை இருவருமே குறி வைத்ததாக கூறப்பட்டது. உடனே டெல்லி தலைமை வரை போராடி வானதி சீனிவாசன் ஓ.கே. செய்துள்ளதாகவும், இதனால் அதிப்தி அடைந்த அண்ணாமலை தேர்தலில் போட்டியிட தான் விரும்பவில்லை எனக்கூறி பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியதாக வெளியான சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
தொகுதி பங்கீடு விவகாரத்தில் அண்ணாமலை அதிருப்தியில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நேற்றைய தினம் அவரை சமாதானப்படுத்தக்கூடிய வகையில பியூஷ் கோயில் கலந்து கொண்டநிகழ்வுக்கு அண்ணாமலைக்கு அவசர அழைப்பானது கொடுக்கப்பட்டு இருந்தது. அப்போது பாண்டிச்சேரியில் இருந்த அண்ணாமலை, ஹெலிகாப்டர் மூலம் அவசர அவசரமாக சென்னைக்கு வருகை தந்து பியூஷ் கோயல் தலைமையிலான அந்த கூட்டத்தில் பங்கேற்றி இருந்தார். எனவே அந்த கூட்டத்தில் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தன்னுடைய ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருப்பதாகவும், அதற்கான பெயர்களையும் பியூஸ் கோயில் வழங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் வேட்பாளர்களினுடைய பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: 4 வருசம் கூட ஆகல!! அதுக்குள்ள இப்பிடி கோர சம்பவம்!! சமயபுரம் கோயிலில் பெண் பலி!! அரசை விளாசும் அண்ணாமலை!
அந்த பட்டியலைதான் பாஜக தேசிய தலைமைக்கு தமிழக பாஜக தலைமை அனுப்பி இருக்கிறது. எனவே அண்ணாமலையினுடைய பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட தெரிவித்திருந்தார். எனவே அண்ணாமலையினுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது, கோவை வடக்கு தொகுதியில் பெரும்பாலும் அண்ணாமலை பெயர் இடம் பெற்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளிலும் கூட அண்ணாமலை போட்டியிட்டால் அங்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், எனவே இரண்டு தொகுதிகளிலும் கூட அண்ணாமலையினுடைய பெயர் இடம் பெற்றிருக்கலாம் என்ற ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
இதையும் படிங்க: அப்படியா?!... அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே... அண்ணாமலை பெயரை சொன்னதும் அலர்ட் ஆன வானதி...!