தமிழக பாஜக தலைவர் பொறுப்பை நயினார் நாகேந்திரன் ஏற்றதிலிருந்து கட்சியின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் கட்சியில் இருந்து கொண்டே ஆதிமுக கூட்டணிக்கு எதிராகவும் தற்போதைய மாநில தலைமைக்கு எதிராகவும் சிலர் செயல்படுவதாக மேலிடத்திற்கு ஆதாரங்களுடன் புகார்கள் பறந்தன. தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக பாஜகவில் உள்ளடி வேலைகள் தொடருமேயானால் அது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என உணர்ந்த கட்சி மேலிடம் நிர்வாகிகளுக்குிடையே நிலவி வரும் முட்டல் மோதல்களுக்கு முற்றுப்புள்ளை வைக்கும் விதமாகவே மதுரை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சா மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மதுரை ஜிஆர்டி ஹோட்டலில் தங்கியிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகத்தை அழைத்து தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பற்றி அவர் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தமிழக பாஜகவின் முன்னாள் மற்றும் இந்நாள் மாநில தலைவர்களை ஹோட்டலுக்கு வரவழைத்த அமித்ஷா அவர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடனிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆலோசனையின் போது நயினார் நாகேந்திரனுக்கு பாஜக நிர்வாகிகள் சிலர் ஒத்துழைப்பு வழங்காததால் கட்சியின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அமித் ஷா நயினாருக்கு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திமுகவை விரட்டுவதே ஒற்றை இலக்கு..! அண்ணாமலை அனல் தெறிக்கும் பேச்சு..!
அதிமுக கூட்டணிக்கு எதிராக செயல்படுவது பாஜகவுக்கு எதிராக செயல்படுவதற்கு சமம் எனவும், இனிமேல் அதிமுக கூட்டணிக்கு எதிராகவோ, பாஜக்க தலைமைக்கு எதிராகவோ யாரேனும் செயல்பட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் அண்ணாமலையை வைத்துக்கொண்டு அமித்ஷா கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை நயினார் நாகேந்திரன் தலைமையில் தான் எதிர்கொள்ள விருப்பதாக அழுத்தம் திருத்தமாக கூறிய அமித் ஷா அவருக்கு அனைத்து தரப்பும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அண்ணாமலையை பார்த்து கண்டிப்புடன் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!