கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு
நாளையுடன் எஸ்ஐஆர் பணிகள் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், எங்கள் தேசிய தலைவர் கூட்டத்தை கூட்டியிருக்கின்றார். 12 மாநிலங்களுக்கு கூட்டத்தை கூட்டி இருக்கிறார், அதில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கின்றேன்.அத்துடன் காசி தமிழ் சங்கத்திலும் கலந்து கொள்ள செல்கிறேன் என்றார்.
மேலும் நேற்று ஓ.பி.எஸ் அமைப்பின் நிர்வாகி குடும்ப விழாவிற்கு சென்றிருந்தேன், அங்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தேன் . தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு, கட்சியில் மாநில தலைவர் நயினார் இருக்கிறார், டெல்லியில் தலைவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்த அண்ணாமலை, அவர்கள் கூட்டணியில் இருக்கின்றனர், இல்லை என்பதை தாண்டி அவர்களுடன் நட்பை தொடர வேண்டும் என நினைக்கின்றேன். பரஸ்பர அன்பு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முதல்வராக விஜய் வருவார் என செங்கோட்டையன் சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு,
செங்கோட்டையன் அரசியல் பாரம்பரிய கொண்டவர், நிறைய கள அரசியலைப் பார்த்தவர், நிறைய முறை வெற்றி பெற்றவர் , யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், இன்னொரு இடத்திற்கு போய்விட்டார் என்பதற்காக தவறாகவும் பேச வேண்டாம் எனவும் தெரிவித்தார். செங்கோட்டையன் அவர்களுடைய கட்சியை பற்றி பெருமையாக பேசுவார், அது அவர்கள் கருத்தாக பார்க்க வேண்டும் எனவும், ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம், களச்சூழல் , ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் போன்ற பல காரணங்களால்தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா கைக்குப் போன திமுக அமைச்சர்கள் லிஸ்ட்... கிடுகிடுத்துப் போன அறிவாலயம்.... ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை...!
திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரை மக்களவையில் திமுக எம்.பிகள் , நீதிபதி சாமிநாதன் மீது இம்பீச்மென்ட் மோசனுக்கு போட கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் எனவும்,நீதிபதி சுவாமிநாதன் இந்திய இறையாண்மைக்கு எதிராக தண்டனை கொடுக்கவில்லை, லஞ்ச லாவண்யத்தில் இல்லை எனக்கூறிய அவர்,
அவரது ஒரு தீர்ப்பு திமுகவிற்கு பிடிக்கவில்லை என்பதற்காக இம்பீட்ச்மென்ட் மோஷன் கொண்டு வருவோம் என்று கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
அவர்களுக்கு எதிர்பார்த்த கையெழுத்து கிடைக்காது என தெரிவித்த அவர், ஒரு தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவரை நாங்கள் நீக்குவோம் என்றால் ,மற்ற நீதிபதிகளை அச்சுறுத்துவது போலதான் என தெரிவித்தார்.
திமுக மூத்த தலைவர்களின் லஞ்ச வழக்குகள் பல இடங்களில் இருக்கிறது, இதை வைத்து அவர்களை மிரட்டுகின்றார்களா? தமிழகத்தில் உள்ள மற்ற நீதிபதிகளை திமுக மிரட்டி பார்க்கின்றார்களா என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் வெளியில் வருவது குறித்த கேள்விக்கு ,
யாருடைய நிகழ்வாக இருந்தாலும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும், இன்னொரு முறை தவறாக நடந்தால் அரசியல் மீதே மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள், காவல்துறை கண்ணியமாக இதை நடத்துவார்கள் என நினைக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம், இன்னும் இரண்டு மாத காலம் இருக்கிறது. மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் எனவும், மோடியின் மீது நம்பிக்கை, வலிமையான கூட்டணி, எடப்பாடி பழனிச்சாமி இதற்கு முன்பு முதல்வராக இருந்திருக்கிறார் இதெல்லாம் முக்கிய காரணங்களாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சருக்கு எஸ் ஐ ஆர்யை சக்சஸ் பண்ணி காட்ட வேண்டிய பொறுப்பு இருப்பதாக பார்க்கின்றோம் எனவும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: போடு ரகிட.. ரகிட..!! - தமிழ்நாட்டை தட்டி தூக்குறோம்... அண்ணாமலைக்கு அமித் ஷா கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!