சபாநாயகர் கருப்பையா தலைமையில் பரபரப்பான சூழலில் நடைபெற்றது. கூட்டத் தொடக்கத்தில் முதலமைச்சர் விஜய்க்கு கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பிரபு உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர். அமைச்சரான ஒருவரோ வெற்றிச் சான்றிதழை கொண்டு வராத காரணத்தால் பதவியேற்க முடியாமல் போனது அவையில் பேசுபொருளானது.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
இதையும் படிங்க: இரண்டாக உடைந்தது அதிமுக! சட்டசபையில் வெட்ட வெளிச்சம்!! எடப்பாடி பழனிசாமி vs சி.வி.சண்முகம்!

ஆனால், அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் மயிலம் தொகுதி எம்எல்ஏவுமான சி.வி.சண்முகத்தின் பெயர் அழைக்கப்பட்டபோது அவர் அவையில் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலை ஏற்படுத்தியது. பலமுறை பெயர் அறிவிக்கப்பட்டும் அவர் வராததால், அடுத்த உறுப்பினரின் பெயர் வாசிக்கப்பட்டது.
சி.வி.சண்முகத்தின் இந்த திடீர் புறக்கணிப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதால், கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பதவியை விலக எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 34 அதிமுக எம்எல்ஏக்களுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த குழு தவெக அரசுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
சட்டசபையில் சி.வி.சண்முகத்தின் வருகையின்மை தற்போது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக மாறியுள்ளது. இது அதிமுகவில் மேலும் உட்கட்சி குழப்பத்தை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!