தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் வேளையில், அதிமுக-வில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு மற்றும் அரசியல் நகர்வுகள் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 15 எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் பிற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில், அதிமுக தரப்பில் ஏற்பட்டுள்ள இந்த நகர்வு குறித்துப் பின்வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சி.வி.சண்முகம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 15 பேருடன் சி.வி.சண்முகம் புதுச்சேரிக்குச் சென்று அங்குள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளார். முன்னதாக, தவெக-விற்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: “தவெகவுக்கு ஆதரவு இல்லை” - அதிமுக அதிரடி அறிவிப்பு: முற்றுப்புள்ளி வைத்தார் கே.பி. முனுசாமி!
விஜய் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை இன்னும் ஆளுநரிடம் சமர்ப்பிக்காததால், அவர் முதலமைச்சராகப் பதவியேற்பதில் ஏற்கனவே தாமதம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், சி.வி.சண்முகம் தலைமையிலான இந்த அதிருப்தி குழுவின் நகர்வு, தவெக-விற்கு ஆதரவான ஒன்றாக அமையுமா அல்லது அதிமுக-வில் பெரும் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், அதிமுக-வில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் தமிழக அரசியலை அடுத்தகட்டப் பரபரப்பிற்கு இட்டுச் சென்றுள்ளது.
இதையும் படிங்க: LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!