தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வரும் அரசியல் இழுபறியில், ஒரு முக்கியத் திருப்பமாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்கப் போவதில்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தவெக மற்றும் அதிமுக கூட்டணி அமையலாம் என நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 47 இடங்களை வைத்துள்ள அதிமுக-வின் ஆதரவை தவெக கோரலாம் எனத் தகவல்கள் பரவின. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி இதனை மறுத்துள்ளார்.
"தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கப் போவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்தப் பேச்சும் எழவில்லை. அதிமுக என்பது ஒரு மிகப்பெரிய இயக்கம்; எந்தச் சூழலிலும் தவெக-வை ஆதரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை," என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். அதிமுக-வின் இந்தத் திடீர் அறிவிப்பு தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!
தவெக ஆட்சி அமைக்க இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ள சூழலில், அதிமுக-வின் இந்த முரண்பட்ட நிலைப்பாடு விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருவேளை அதிமுக ஆதரவு தராத பட்சத்தில், சுயேச்சைகள் அல்லது மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவைத் திரட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தவெக தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் அடுத்த சில மணி நேரங்களில் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலையில் விழுந்த பேரிடி... விடிந்ததுமே அதிமுக வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!