திண்டுக்கல்லில் அதிமுக அம்மா பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதற்கு அப்போதைய அமைச்சர் பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட கே.என். நேரு மற்றும் எ.வ. வேலு ஆகியோருக்கு எதிராக, கடந்த கால ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த 3 தொகுதிகள் அடங்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"புத்தகத்தை திறக்க வைத்துவிடாதீர்கள்" என்று முதலமைச்சர் எச்சரித்தும், தங்களுக்கு மடியில் கனமில்லை என்று கூறி அந்தப் புத்தகத்தைத் திறக்கச் சொல்ல துணிவில்லாமல் ஐ. பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகிய மூவருமே மௌனம் காத்தனர். ஊரக வளர்ச்சித் துறை மட்டுமின்றி இன்னும் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் உள்ள ஊழல்களும் வெளிவர வேண்டும்; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.
இதையும் படிங்க: ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!
சவுதியில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலை மீட்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்றபோது, சபாநாயகர் 5 நாட்கள் அனுமதி மறுத்து மெத்தனமாகச் செயல்பட்டார். எடப்பாடியாரின் வெளிநடப்பு மற்றும் தொடர் அழுத்தத்திற்குப் பிறகே 6-வது நாளில் அனுமதி வழங்கப்பட்டது. மக்களின் உயிருடன் தொடர்புடைய அவசரப் பிரச்சினைகளுக்காக எடப்பாடியார் தொடர்ந்து உறுதியாகக் குரல் கொடுத்து வருகிறார்.
கார்களைக் கொடுத்து எம்எல்ஏக்களை வசப்படுத்துகிறார் என்று சொன்னால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் விலை போக தயாராகி விட்டார்கள். ஸ்டாலினின் அம்புக்கு அவர்கள் பலியாகி விட்டார்கள்.107 எம்எல்ஏக்கள் வைத்திருக்கின்ற விஜயின் ஆட்சி ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது. அதனால் தான் 6 எம் எல் ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் சந்தித்து அதன் மூலமாக மெஜாரிட்டி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் விஜய் இருக்கிறார்.
கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட ஆறு எம்எல்ஏக்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் சென்று அந்த ஆறு எம்எல்ஏக்களின் பதவிகளை பிடுங்காமல் எடப்பாடி விடமாட்டார் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இடைத்தேர்தல் வந்துவிடும் அதில் மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என விஜய் அதை மறந்து விட வேண்டும்.
திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் தினசரி பேசி அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்னென்ன போக வேண்டுமோ அவை அனைத்தும் போய்க் கொண்டே இருக்கிறது. அதை சொன்னால் ஒரு வழக்கு வரும் என்னவென்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள் இவர்கள் எல்லாம் விஜய்க்கு சப்ப கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மெஜாரிட்டி இல்லாத விஜய் அப்படி ஒரு ஆட்சி எனக்கு தேவையில்லை நான் ராஜினாமா செய்கின்றேன். மறுபடி தேர்தல் சந்திக்கின்றேன் மெஜாரிட்டியோட ஆட்சி கொடுத்தால் ஆட்சி நடத்துகிறேன் எனக்கு ஒரு ராஜினாமா செய்திருந்தால் 233 சீட்டும் விஜய் ஜெயித்து இருக்க முடியும்.
இன்றைக்கு கேவலம் பதவி ஆசைக்காக என்னென்ன தில்லுமுல்லு செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார் அதுதான் ஆட்சியின் தன்மை. ஆட்சிக்கு வந்தவுடன் எம்எல்ஏக்கள் ஓடிப் போய் விடுவார்கள் என்று பயந்து வரி எங்களது வரிப்பணத்தை எடுத்து கொடுத்தால் இதுவரை எம்எல்ஏ இருந்தவர் எல்லாம் கிறுக்கு பயன்களா நாங்கள் எல்லாம் லூசு பயல்களா? என்னடா உங்களுக்கு மட்டும் புது அறிவு வந்துவிட்டது. எவ்வளவு மோசமான ஆள் எண்ணங்கள் எப்படி இருக்கிறது என தயவு செய்து பார்க்க வேண்டும் ஒரு பொறுப்பு கொடுத்து கஜானாவை கையில் கொடுத்தால் அவங்க ஆள்களுக்கு எல்லாம் செய்கிறேன் என சொல்லி செய்கிறார் 90 பேருக்கு கார் உள்ளது 10 பேருக்கு மட்டும் கார் இல்லை அவர்கள் சொந்தமாக கடன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். கார் இல்லாத எம்எல்ஏக்களை ரகசியமாக கூப்பிட்டு சினிமாவில் இரவு பகலாக சம்பாதித்த பணம் இதை வைத்து கார் வாங்கிக் கொள் என கொடுக்க வேண்டியதானே . உனது எம்எல்ஏக்கள் ஓடிப் போய் விடக்கூடாது என்பதற்காக அரசாங்க பணத்தை எடுத்து கார் வாங்கித் தருவது என்பது நீ நேர்மையான முதலமைச்சர் இல்லை என்பதை மக்களுக்கு நிரூபித்து விட்டீர்கள் என்றார்.
இதையும் படிங்க: தவெகவின் 100 நாள் ஆட்சி ஒரு பூஜ்ஜியம் - பாயிண்ட்களை அடுக்கி விஜயை விளாசிய கே.பி.முனுசாமி...!