காட்பாடியில் வேலூர் வடக்கு மாவட்ட திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளரும் கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அலுவலகத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இதில் திமுக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் காட்பாடி தொகுதியின் வேட்பாளராக என்னை குறிப்பிட்டு பேசினீர்கள். ஆனால் அதை நான் ஏற்றுகொள்ளமாட்டேன். தலைமை யாரை அறிவிக்கிறதோ அதன் பிறகு தான் வேட்பாளர் என வரும் உங்கள் மகிழ்ச்சிக்கு வேண்டுமானால் பேசிக்கொள்ளலாம். ஆனால் நான் தலைமைக்கு கட்டுபட்டவன் இதை நான் ரசிக்கவில்லை
அகில இந்திய கட்சிகளே நிதானம் இல்லாமல் இருக்கும் போது திமுக தலைவர் சாதூர்யத்துடன் பொறுமையாக கூட்டணியை அவர் முடித்தார். இது உண்மையில் பாராட்ட படவேண்டியது தற்போது அரசியல் பேச வேண்டாம் என நினைக்கிறேன் என பேசினார்.
இதையும் படிங்க: துரைமுருகனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி..!! இனி அமைச்சர் பதவி கிடையாதா? திமுகவில் நடப்பது என்ன..??
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் கொடுக்கிறோம், பிரிட்ஜ் கொடுக்கிறோம், மாசம் 2000 ரூபாய் கொடுக்கிறோம், வருஷத்துக்கு மூணு சிலிண்டர் தரோம்னு அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்காங்களே என்ற கேள்விக்கு, இப்படிப்பட்ட அறிவிப்புகளை செய்வது சில கட்சிகளுக்கு வாடிக்கை, அதில் இது ஒன்று என கூறினார்.
அதேபோல சீமான் நேற்று தெரிவித்துள்ளார். கனிமொழிக்கு மாநில அளவில சீட் கொடுக்க மாட்டாங்க, ஏன்னா அவங்க ஒரு திறமையான பெண், அவங்களுக்கு கொடுத்தா உதயநிதிக்கு பாதிப்பு ஏற்படும்னு சீமான் தேர்தல் பிரச்சாரத்துல சொல்லியிருக்காரு என்ற கேள்விக்கு, அதைப்பற்றி எனக்குத் தெரியாது என்றார்.
இப்போ அதிமுக தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர் நலன் கருதி சில சலுகைகள் கொடுத்திருக்காங்க. அதுபோல திமுக தேர்தல் அறிக்கையில்பத்திரிகையாளர்களுக்கு ஏதாவது வருவதற்கு வாய்ப்பு இருக்கா ? மருத்துவக் காப்பீடு மற்றும் வீடு கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் அதிமுக அறிக்கையில் உள்ளது என்ற கேள்விக்கு, தேர்தல் அறிக்கை பரிசீலனையில் உள்ளது. அந்தக் குழுவில் நான் இல்லை இப்போ அதைப்பற்றி சொல்ல முடியாது என்றார்.
அதிமுக நிறைய தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட்டுருக்காங்க, ஆனா அதற்குரிய நிதி கிடைக்குமா? ஏற்கனவே திமுக நிறைய கடன் வாங்கி 9 லட்சம் கோடியைத் தாண்டிடுச்சுன்னு சொல்றாங்க, இவங்க தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற பல லட்சம் கோடி செலவாகும், இதைப்பற்றி உங்க கருத்து என்ன? அவங்க ஆட்சிக்கு வரப்போறது இல்லை. சும்மா ஏதோ ஒன்னு சொல்லிட்டுப் போறாங்க. அது வெறும் வெத்து வேட்டு தான்.
உங்க கூட்டணியில இருக்கிற ஒரே தலித் தலைவர் திருமாவளவன் மட்டும்தான். அவருக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் ஏன் இவ்வளவு இழுபறி மற்றும் காலதாமதம்? அவரே வருத்தப்பட்டு பேட்டி கொடுத்திருக்காரே என்ற கேள்விக்க அவருக்கு ஒன்னும் வருத்தம் இல்லை, எங்க பக்கத்துல மகிழ்ச்சியோடுதான் இருக்கிறார் என்றார்.
இதையும் படிங்க: காட்பாடியில் மீண்டும் போட்டி? களமிறங்கும் துரைமுருகன்?! வயது முதிர்வு காரணமாக சீட் மறுப்பா? அப்டேட் தகவல்!