இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்ற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று குற்றம்சாட்டி வைஷ்ணவி கட்சியில் இருந்து விலகினார். தமிழக வெற்றி கழகத்தில் இருந்தபோது, கனிமொழியை விமர்சித்து பேசி இருந்தார். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய அவர், கனிமொழி அக்கா உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க., இல்லைனா ஒன்னும் பிரச்சனை இல்ல., எங்க அண்ணன் கிட்ட விட்டு விடுங்கள் இன்று பேசி தொண்டர்களின் கை தட்டல்களை வாங்கினார். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களை மதிப்பதில்லை என்று கூறி அங்கிருந்து விலகினார்.

இதன் பிறகு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.வைஷ்ணவி, தவெகவை பாஜகவின் மற்றொரு வடிவமாக விமர்சித்து, திமுகவில் இணைந்தது தனது சமூகப் பணியை முழு வீச்சுடன் தொடர உதவும் என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

இதனை அடுத்து பல்வேறு ஊடகங்களுக்கு தமிழக வெற்றி கழகம் குறித்தும் திமுகவில் இணைந்தது குறித்தும் பேசி வந்தார் வைஷ்ணவி. தான் ஃபேமஸ் ஆகி விடுவதாக எண்ணி தமிழக வெற்றி கழகத்தில் மட்டம் தட்டப்படுவதாக கூறிய அவர், திமுகவில் பெண்களுக்கு மதிப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் இணைந்திருப்பதாகவும், தொடர்ந்து சமூக பணி மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

வழக்கம்போல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, வசமாக சிக்கினார் வைஷ்ணவி. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த வைஷ்ணவியிடம் நெறியாளர் திராவிடம் என்றால் என்ன என்று கேட்க... "நான் என்ன சொல்றது" என்ற வடிவேலுவின் டயலாக்குக்கு ஏற்றார் போல் முழித்துவிட்டு ஐடியா இல்ல., ஸ்கிப் பண்ணிடுங்க எனக்கூறி சிக்கிக்கொண்டார் இன்ஸ்டா புரட்சியாளர்.

திராவிட கட்சிகள் இணைந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்டதற்கு சமாளிக்க கூட வழி தெரியாமல் வைஷ்ணவி மாட்டிக் கொண்டது சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. அம்மாடி வைஷ்ணவி., இனிமேல் ஆச்சு திராவிடம் பற்றியும் கட்சியின் கொள்கைகள் பற்றியும் தெரிந்து கொண்டு பேட்டி அளிக்க போய் வாமா என சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றன.
இதையும் படிங்க: ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்