திமுக கூட்டணியில் எத்தனையோ கட்சிகள் இருக்க, திருமாவளவனை மட்டும் ஏன் இந்த கட்சிகள் குறிவைக்கின்றன. ஆனால் திருமாவளவனோ எத்தனை ஆசை வார்த்தைகள் கூறினாலும், அரசியல் தெளிவில்லாத விஜய் உடன் கூட்டணி கிடையாது என படு ஓபனாக அறிவித்துவிட்டார். அதேபோல் தான் பாஜட்கவை ஜனநாயக ஹ்விரோத சக்தி என்றும், அக்கட்சியுடன் எக்காரணம் கொண்டும் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொடருவதில் விசிக உறுதியாக உள்ளது. திமுக அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றி வாகை சூட அதன் கூட்டணி கட்சிகளின் பலமே மிக முக்கிய காரணமாக உள்ளது. இதனை பல நேரங்களில் எதிர்க்கட்சிகளே வெளிப்படையாக தெரிவித்துள்ளன. இதையெல்லாம் மனதில் வைத்தே அதிமுக கூட்ட வலிமையான கூட்டணி அமைக்க போராடி வருகிறது. திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தாமல் தேர்தலைச் சந்தித்தால், அந்த தேர்தல் வெற்றியில் முடியாது என்பதை உறுதியாக நம்பும் எதிர்க்கட்சிகள் அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: 50 வருஷ வாழ்க்கைய 5 நிமிஷத்துல இழந்துட்டோம்..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமா நேரில் ஆறுதல்..!

அதில் ஒரு பகுதியாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிர்க்கட்சிகள் குறிவைத்து வருகின்றன. வட தமிழகத்தில் பட்டியலின மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு தான் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் திமுகவின் வாக்கு வங்கி உயர்வதற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இதனால் தான் திமுகவின் கூட்டணியில் இருந்து விசிகவை எப்படியாவது பிரித்து, தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் முதல் தேசிய அளவில் வளர்ந்து நிற்கும் பாஜக வரை துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான மதிப்பு கிடுகிடுவென உயருவதை கண்ட திருமா, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதி பயங்கரமான மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளாராம். குறிப்பாக இந்த முறை திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் விசிக வைக்க உள்ள டிமெண்ட் அண்ணா அறிவாலயத்தையே சற்று அசைத்து பார்க்கக்கூடியதாக உள்ளது.

விசிக 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது 2 தொகுதிகள் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆறு தொகுதிகள் ஒதுக்குனாங்க. 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு பொதுத்தொகுதி உட்பட 2 தொகுதிகளை விசிக கேட்ட நிலையில், 2026ம் ஆண்டு தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் எனக்கூறி 2 சீட் கொடுத்தாங்க. இந்த முறை இரட்டை இலக்கத்தில் தான் சீட் கேட்க வேண்டும் என்பதில் விசிக மிக உறுதியாக இருக்கிறதாம். திமுக கூட்டணி கணக்கை எட்டுல தொடங்கலாம்னு நினைச்சிருந்த நிலையில், 10க்கும் மேல எம்.எல்.ஏ. சீட், ரெண்டு எம்பி சீட் ஆக மொத்தம் 12 சீட் வேண்டும் என கணக்கு வச்சிருக்காம் விசிக. குறைஞ்சது 10 சீட்டையாவது வாங்கிவிட வேண்டும் என்பதை திருமாவளவன் இலக்காக வைத்திருக்கிறாராம்
இதையும் படிங்க: எல்.முருகன், நயினார் நாகேந்திரனுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. அரசியல் அரங்கில் பரபரப்பு!!