• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூர் சம்பவ விசாரணையில் ஸ்டாலினுக்கு ஏன் இந்த அவசரம்?.. பாயிண்ட்டை பிடித்த இபிஎஸ்..!

    கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன?
    Author By Amaravathi Thu, 09 Oct 2025 10:13:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS slams DMK Government for karur stampede issue

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் இன்று திருச்செங்கோடு தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சானார்பாளையம், குமாரபாளையம் மெயின் ரோடு திறந்த வெளி மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களிடையே பேசினார். அப்போது பேசிய அவர், சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடப்பதாக திமுக அரசு அமைத்த குழுவே அறிக்கை கொடுத்தது. அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளனர், ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. 

    இதனை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடுமையாக சாடியிருக்கிறது. இதற்கு என தனி அதிகாரிகள் அமைக்கப்பட்டு, ஒரு மாதம் மேலாகிறது, ஆனால் இன்னமும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. 

    அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள், அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை. ஒருநபர் கமிஷன் அமைத்த பிறகு யாரும் வெளியில் தகவல் சொல்லக் கூடாது என்பது நியதி. ஆனால் திமுக அரசு கமிஷன் அமைத்து, அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க வைக்கிறார்கள்.

    இதையும் படிங்க: கரூர் துயர சம்பவம்: செந்தில் பாலாஜியை சீண்டிய முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி...!

    அரசு அதிகாரிகள், திமுகவின் கைகூலியாக மாறிவிட்டார்கள். கையை காட்டியிருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது என்று சொல்கிறார்கள். இதை சொல்லவா உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது, உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள், அரசியல்வாதிகள் அரசியல் செய்யட்டும். அதிகாரிகள் அரசியல் பேசக்கூடாது. ஏடிஜிபி சம்பவம் பற்றி பேசுகிறார். டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கும்போது ஏடிஜிபி ஒரு கருத்து சொல்கிறார் என்றால், அதன்படிதானே டிஎஸ்பி நடப்பார்? பிறகு எப்படி விசாரணை சரியாக நடைபெறும்? இதன் மூலம் திட்டமிட்டு சதி செய்கின்ற செயல் அம்பலமாகிவிட்டது. 

    41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது. இதில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு 10ம் தேதி வருகிறது, நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறோம், ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எண்ணம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் நிறைவேறும் என்று நம்புகிறோம், இந்த சதித் திட்டத்திற்கு யார் பொறுப்பாளர்களோ, அவர்கள் இந்த சம்பவத்துக்கு பொறுப்பாளர்கள் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    10 ரூபாய் பற்றி சொன்னால்தான் மக்களுக்கு மன நிறைவு கிடைக்கிறது. அந்தளவுக்கு மக்கள் பாதிப்பு அடைந்துவிட்டனர், செந்தில் பாலாஜி அவர்களே நான் சொல்வது சரியல்ல என்கிறீர்கள், ஆனால், மக்கள் இதையே பேசுகிறார்கள், மக்கள் குரலாகத்தான் நான் ஒலித்துக்கொண்டிருக்கிறேன். 

    மக்கள் எண்ணத்தின் அடிப்படையில்தான் எங்கள் கூட்டணி செயல்படுகிறது. மக்கள் கருத்து நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இப்படி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா? எனக்கூறினார். 

    இதையும் படிங்க: 10 நாள் கழித்து இதுதேவையா? - கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துடன் வீடியோ காலில் 10 நிமிஷம் பேசிய விஜய்...!

    மேலும் படிங்க
    2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஹங்கேரிய எழுத்தாளர்..!!

    2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஹங்கேரிய எழுத்தாளர்..!!

    உலகம்
    “இனி உங்களுக்கு கரூர் வேண்டாம்...”  - செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட புது உத்தரவு... ஷாக்கில் எடப்பாடி...!

    “இனி உங்களுக்கு கரூர் வேண்டாம்...” - செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட புது உத்தரவு... ஷாக்கில் எடப்பாடி...!

    அரசியல்
    கருணாநிதி என்ன கிழிச்சாரு? அவரு பேர மட்டும் தான் வெக்கணுமா... அதிமுக விமர்சனம்...!

    கருணாநிதி என்ன கிழிச்சாரு? அவரு பேர மட்டும் தான் வெக்கணுமா... அதிமுக விமர்சனம்...!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

    கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

    தமிழ்நாடு
    900 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு இப்படியொரு நிலையா? - தாராசுரம் ஆலயத்தை சூழ்ந்த மழைநீரால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    900 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு இப்படியொரு நிலையா? - தாராசுரம் ஆலயத்தை சூழ்ந்த மழைநீரால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஹங்கேரிய எழுத்தாளர்..!!

    2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஹங்கேரிய எழுத்தாளர்..!!

    உலகம்
    “இனி உங்களுக்கு கரூர் வேண்டாம்...”  - செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட புது உத்தரவு... ஷாக்கில் எடப்பாடி...!

    “இனி உங்களுக்கு கரூர் வேண்டாம்...” - செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட புது உத்தரவு... ஷாக்கில் எடப்பாடி...!

    அரசியல்
    கருணாநிதி என்ன கிழிச்சாரு? அவரு பேர மட்டும் தான் வெக்கணுமா... அதிமுக விமர்சனம்...!

    கருணாநிதி என்ன கிழிச்சாரு? அவரு பேர மட்டும் தான் வெக்கணுமா... அதிமுக விமர்சனம்...!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

    கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

    தமிழ்நாடு
    900 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு இப்படியொரு நிலையா? - தாராசுரம் ஆலயத்தை சூழ்ந்த மழைநீரால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    900 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு இப்படியொரு நிலையா? - தாராசுரம் ஆலயத்தை சூழ்ந்த மழைநீரால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share