தமிழகம் முழுவதும் தீவிர காவல் நடை ரோந்து பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களுடனான தொடர்பை வலுப்படுத்துமாறு காவல்துறைக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை திறம்பட பராமரித்தல், குற்றங்களை முன்கூட்டியே தடுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு காவல் பணிகளை அதிகரித்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில், புதிதாக பதவியேற்றுள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால், மாநிலம் முழுவதும் காவல்துறையின் களப்பணிகள் மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் ஒரே மாதிரியான செயல்திறனுடன் நடைபெறுவதை உறுதி செய்ய பல்வேறு அறிவுறுத்தல்களை காவல் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: "ஐயோ போச்சே"..! மது பாட்டிலை உடைத்த போலீஸ்.? போலீஸ் ஸ்டேஷனில் உருண்டு குடிமகன் தர்ணா..!!
காவல் நடை ரோந்தின் முக்கிய நோக்கம், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டறிதல், உள்ளூர் சூழ்நிலைகளை ஆய்வு செய்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிதல், சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்காணித்தல் மற்றும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்துதல் ஆகியவையாகும்.
இந்த நடை ரோந்து பணியின் ஒரு பகுதியாக, கடந்த 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த ரோந்து பணிகளுக்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சோதனைக்கு பதில் சலுகையா? 3 போலீஸ் சஸ்பென்ட்..!! குமரியில் அதிரடி நடவடிக்கை..!!