• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Editor Sun, 22 Jun 2025 16:03:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    govt-employees-cheated-by-not-implementing-the-old-pension-scheme-anbumani

    தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

    Anbumani Ramadoss

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை

    இதையும் படிங்க: சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை தி.மு.க. அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் என்றழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது என்பதால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2003-ம் ஆண்டுக்கு முன் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    Anbumani Ramadoss

    2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், அரசின் மோசடிக்கு எதிரான போராட்டம் நடத்துவதற்கு அரசு ஊழியர்கள் தீர்மானித்தனர்.

    அவர்களின் கோபத்தை அறிந்த தமிழக அரசு, தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 4-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

    இந்தக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை 9 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குழு அறிவிக்கப்பட்டு 139 நாள்கள் நிறைவடைந்து விட்ட பிறகும் கூட, இதுவரை அக்குழு எந்தப் பணியையும் செய்ததாக தெரியவில்லை. ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பணி வரம்புகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், பணி வரம்புகள் இன்று வரை மக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

    Anbumani Ramadoss

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? அல்லது வேறு வகையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமா? என்பதை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுடன் விவாதித்துதான் முடிவெடுக்க முடியும். ஆனால், அதற்கான கலந்தாய்வுக் கூட்டங்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் மூன்று அதிகாரிகளும் இதுவரை ஒன்று கூடி தங்களுக்கான திட்டத்தின் நோக்கம் குறித்து விவாதித்தார்களா? என்பது கூட தெரியவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைப்பதே காலம் கடத்தும் செயல்தான் என்பதை கடந்த பிப்ரவரி மாதமே கூறியிருந்தேன்.

    பத்தாண்டுகளுக்கு முன்பே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த 2015-16ம் ஆண்டுகளில் தீவிரமடைந்த நிலையில், 2016ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்ததைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு ஒன்றை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.

    அக்குழு எந்த பணியையும் செய்யாத நிலையில், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ். ஸ்ரீதர் தலைமையில் இன்னொரு குழுவை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார். அந்தக் குழு அதன் அறிக்கையை 27.11.2018 அன்று தாக்கல் செய்துவிட்ட நிலையில், தி.மு.க. அரசுக்கு மனம் இருந்தால் அதன் அறிக்கையையே செயல்படுத்தியிருக்கலாம். அதை விடுத்து புதிய குழுவை அமைத்ததே தவறு எனும்போது, அந்தக் குழுவும் பணி செய்யாமல் காலம் தாழ்த்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை.

    Anbumani Ramadoss

    தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 6 லட்சத்து 24,140 பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில்தான் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மொத்த பணியாளர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமாகும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து இதுவரை ஓய்வு பெற்ற 49,912 பேருக்கு சராசரியாக ரூ.10 லட்சம் வீதம் ரூ.4,381 கோடி வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த பயன்களும் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. 

    அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தான் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதேநிலை மீதமுள்ள 6.24 லட்சம் பேருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

    Anbumani Ramadoss

    அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள்தான். தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

    பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க.வை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி. 

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    மேலும் படிங்க
    ரூ.1க்கு கீழ் பென்னி ஸ்டாக்.. 16,800% லாப வளர்ச்சி பதிவு.. எந்த நிறுவனம்?  எப்படி?

    ரூ.1க்கு கீழ் பென்னி ஸ்டாக்.. 16,800% லாப வளர்ச்சி பதிவு.. எந்த நிறுவனம்? எப்படி?

    பங்குச் சந்தை
    மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான் - இஸ்ரேல்.. நாடு திரும்பிய மேலும் 280 இந்தியர்கள்..!

    மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான் - இஸ்ரேல்.. நாடு திரும்பிய மேலும் 280 இந்தியர்கள்..!

    இந்தியா
    ரூ.84,600-ல் தொடங்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்.. விற்பனை 20 லட்சத்தைத் தாண்டி சாதனை!

    ரூ.84,600-ல் தொடங்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்.. விற்பனை 20 லட்சத்தைத் தாண்டி சாதனை!

    ஆட்டோமொபைல்ஸ்
    விமான பயணிகள் கவனத்திற்கு.. விமான அட்டவணையை மாற்றிய ஏர் இந்தியா.. ஜூலை 15 வரை மாற்றங்கள்!

    விமான பயணிகள் கவனத்திற்கு.. விமான அட்டவணையை மாற்றிய ஏர் இந்தியா.. ஜூலை 15 வரை மாற்றங்கள்!

    இந்தியா
    வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? வங்கி சேவை கட்டணங்கள் மாறுது - முழு விபரம் இதோ!

    வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? வங்கி சேவை கட்டணங்கள் மாறுது - முழு விபரம் இதோ!

    தனிநபர் நிதி
    பழங்குடி மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எப்ஐஆர் பதிவு..!

    பழங்குடி மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எப்ஐஆர் பதிவு..!

    சினிமா

    செய்திகள்

    மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான் - இஸ்ரேல்.. நாடு திரும்பிய மேலும் 280 இந்தியர்கள்..!

    மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான் - இஸ்ரேல்.. நாடு திரும்பிய மேலும் 280 இந்தியர்கள்..!

    இந்தியா
    முருக பக்தர்களாக வந்த நீங்கள் வீரபாகுவாக செல்ல வேண்டும்.. அண்ணாமலை ஃபயர் ஸ்பீச்..!

    முருக பக்தர்களாக வந்த நீங்கள் வீரபாகுவாக செல்ல வேண்டும்.. அண்ணாமலை ஃபயர் ஸ்பீச்..!

    தமிழ்நாடு
    கோபத்தில் மைதானத்திலேயே பண்ட் செய்த செயல்.. கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்.. என்ன நடந்தது?

    கோபத்தில் மைதானத்திலேயே பண்ட் செய்த செயல்.. கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்.. என்ன நடந்தது?

    கிரிக்கெட்
    எல்லாம் நாசமா போச்சு.. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்.. விளாசிய இபிஎஸ்..!

    எல்லாம் நாசமா போச்சு.. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்.. விளாசிய இபிஎஸ்..!

    தமிழ்நாடு
    சொர்ணபுரியில் இருப்பது போல உணர்வு.. முருக பக்தர்கள் மாநாட்டில் நெகிழ்ந்து பேசிய நயினார்..!

    சொர்ணபுரியில் இருப்பது போல உணர்வு.. முருக பக்தர்கள் மாநாட்டில் நெகிழ்ந்து பேசிய நயினார்..!

    தமிழ்நாடு
    Gun பாயிண்டில் பெண், 2 குழந்தைகள் கடத்தல்.. யார் அந்த கும்பல்..? ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்..!

    Gun பாயிண்டில் பெண், 2 குழந்தைகள் கடத்தல்.. யார் அந்த கும்பல்..? ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்..!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share