பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக முன்னேற்ற சங்க கூட்டம் திண்டிவனத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு முன்பாக மறைந்த முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் 6 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு குருவின் உருவ படத்திற்கு மலர் தூவி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.

இன்று நடைபெற்ற கூட்டத்திலும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்காமல் புறக்கணித்தார். சமூக முன்னேற்ற சங்க கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முன்னோடி சமூக முன்னேற்ற சங்கம் உள்ளதாகவும், பாட்டாளி மக்கள் கல்வியில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த அமைப்பு உருவாக்கபட்டதாகவும், கட்சி என்றால் கொஞ்சம் கோஷ்டி இருக்க தான் செய்யும் இது எல்லா கட்சிக்கும் சொல்றேன். சங்கம் என்றால் சங்கமிப்பது சமுதாயத்திற்கு பிரச்சனை என்றால் சண்டை அடி இல்லாமல் உதவ வேண்டும்.
இதையும் படிங்க: அப்பா VS மகன்.. கட்சியும், தொண்டர்களும் யார் பக்கம்? மாஸ் காட்டும் அன்புமணி ராமதாஸ்..!
சக்தி மிக்க பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இந்த அமைப்பு மூலம் அரசு ஊழியர்களை கிராமங்கள் தோறும் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். சமூக முன்னேற்ற சங்கத்திற்கு மாதம் மாதம் 500 ருபாய் அளிக்க வேண்டும் என்றும் சமூக முன்னேற்ற சங்கத்தில் உள்ளவர்கள் கிராமங்களில் கஞ்சா இல்லை, மதுவை ஒழித்துவிட்டோம் என மார்தட்டி சொல்லவேண்டும்.

ஊருக்குள் வெளியே தங்கள் கிராமத்தில் யாருக்கும் கஞ்சா மது பழக்கம் இல்லை என்று பேனர்கள் வைக்க வேண்டும் என்றும் தேர்தல் என்றால் பணம், பொதுமக்கள், நேரம் இது மூன்றும் இல்லாமல் கட்சியும் இல்லை தேர்தலும் இல்லை என தெரிவித்தார்.
யார் மனமும் நோகாமல் சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும். எந்த சமூகம் வளர்ச்சிக்காகவும் அது இருக்க வேண்டும். பாமக எந்த சமுதாயத்திற்கும் எதிரானவர்கள் அல்ல எல்லாரையும் அரவனைத்து செயல்படும் என்றும் பாமகவின் துணை தலைவர்கள் எல்லோரும் பல்வேறு சமூகத்தினர் ஒருவர் கூட வன்னியர் இல்லை என ராமதாஸ் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய ராமதாஸ், பா.ம.க.வில் கோஷ்டி என்பதே கிடையாது எனப் பேசினார். தற்போது அன்புமணி ராமதாஸ் கட்சி நடவடிக்கைகளை புறக்கணிக்கும் நிலையில், கட்சி என்றால் கொஞ்சம் கோஷ்டி இருக்கும் என மழுப்பி பேசி உள்ளது சர்ச்சையாகி உள்ளது.
இதையும் படிங்க: வீழும் வேளாண் வளர்ச்சி.. விவசாயத்தை அழித்தது தான் சிறப்பான சாதனையா? திமுக அரசை சாடும் அன்புமணி..!