கோவை தெற்குத் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெறுவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறியும், தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதனிடையே அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் பேசிதாவது:- கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை. எத்தனையோ தேர்தல் நடைபெற்று உள்ளது ஆனால் இது போன்ற அராஜகம் நடந்ததில்லை. தெற்கு தொகுதியில் அதிகமான அட்டூழியங்கள் நடைபெறுகின்றன. இது குறித்த மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன் இருப்பினும் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. காவல்துறை தரப்பிலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பண பட்டுவாடா நடக்கும் பொழுது ஆட்களை நாங்கள் பிடித்துக் கொடுத்தாலும் தேர்தல் அதிகாரிகள் பட்டுவாடா செய்யும் நபரை விட்டுவிட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தெற்கு தொகுதியில் கரூரை சேர்ந்த 18 சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தியது தான்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தரப்பில் பணப்பட்டுவாடா..! தேர்தலை நிறுத்தனும்..! அதிமுக வேட்பாளர் தர்ணா..!!
இந்த தொகுதி கலவர பூமியாக உள்ளது. தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு உள்ளது. இது குறித்து அர்ச்சனா பட்நாயக்கிசம் புகார் அளித்தாலும் பெரிய அளவில் பணம் பிடித்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகிறார்.
உயிரை விட அவருக்கு பணம் பெரியதா? பணம் வாங்கவில்லை என்று கூறினாலும் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த தொகுதியில் கண்டிப்பாக தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். சாதாரண மக்கள் கல்யாண செலவிற்கும் மருத்துவமனை செலவிற்கும் மளிகை சாமான் வாங்குவதற்கு பணம் எடுத்துச் சென்றால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து ஆய்வு செய்கிறார்கள்.
கோவையில் ஒரு லாட்ஜில் கரூர் திமுக ஆட்கள் உள்ளார்கள். அவர்களிடம் பிடிக்கப்பட்டு, ரூ.30 கோடி பணம் பிடிக்கப்பட்டும் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் அவர்களிடமே பணம் ஒப்படைக்கப்படுகிறது.
ஹிட்லர் முசோலினி போன்று சர்வாதிகாரம் இங்கு நடைபெறுகிறதா?நான் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு தகவல் கேட்டும் தற்பொழுது வரை அவர் பதில் அளிக்கவில்லை. போலீசார் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை.
இதையும் படிங்க: புதுப்புது வித்தையால் கொள்ளையடிப்பவர் செந்தில் பாலாஜி..! திமுகவை பந்தாடிய EPS..!