பெருந்துறையில் அரசு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரனோவிற்கு எந்த கட்டாய அறிவிப்புகளும் விதிமுறைகளை விதிக்கப்படவில்லை.

கொரனோவை கட்டுப்படுத்த அனைத்திற்கும் தயாராக இருக்கிறோம். ஆக்சிஜன் சிலிண்டர், 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன ஆக்ஸிஜன் அதிமுக ஆட்சி காலத்தில் 2000 மெட்ரிக் டன் மட்டுமே இருப்பில் இருந்தது ஆனால் தற்பொழுது 3000 மெட்ரிக் டன் சேமிக்கும் அளவிற்கு வசதிகளை அதிகரித்துள்ளோம் கட்டமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு மீண்டும் பதில் :
ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு முறை கூட ஞானசேகருடன் பேசியது இல்லை சைதை தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் வட்டத்தை சார்ந்தவர் ஒருமுறை மழை வெள்ளத்திற்கு சென்றபோது காலை சிற்றுண்டி வழங்குகிற போது அவர் என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார் அதை தவிர வேற எந்த தொடர்பும் இல்லை.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...!
இதை பெரிதாக்கிய பிறகு இந்த வழக்கில் உயர்நீதிமன்றமே ஐபிஎஸ் அலுவலர் மூலமாக விசாரித்து முழுமையாக நடவடிக்கை எடுத்து ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்றமே காவல்துறை நடவடிக்கையை பாராட்டி இருக்கின்றது. இந்திய வரலாற்றிலேயே ஐந்து மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இதுதான்.

சண்முகம் என்ற வட்டச் செயலாளரிடம் பேசி இருப்பதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். 83 வட்ட செயலாளர்கள் எனக்கு இருக்கின்றனர் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக வட்டச் செயலாளர் சண்முகம் என்னிடம் தொலைபேசியில் பேசி இருந்தார். தொடர்பு கொண்ட போன் எண்ணை கண்டறிந்த அண்ணாமலைக்கு என்ன பேசினேன் என்பதையும் எளிதாக கண்டறிய முடியும். அவர் என்ன பேசினார் நான் என்ன பதில் சொன்னேன் என்பதையும் எடுத்து அண்ணாமலை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்றார்.
இதையும் படிங்க: ஞானசேகரன் விஷயத்தில் செல்வபெருந்தகைக்கு ஏன் பதற்றம்? சந்தேகம் எழுப்பிய அண்ணாமலை!