• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அப்பா, அம்மாவை கதறவிட்ட அன்புமணிக்கு கறையைப் பத்தி பேச தகுதியில்ல... சேகர் பாபு நெத்தியடி ...!

    தமிழ்நாட்டிற்கே மாறாத ஒரு கரையை அன்புமணி ராமதாஸ் ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டார். குடும்ப பாசம், தாய் தந்தை பாசம் என்னவென்று தெரியாமல் பறந்து கொண்டிருக்கிறார். கறையைப் பற்றி அவர் சொல்லக்கூடாது - அமைச்சர் சேகர் பாபு காட்டம்
    Author By Amaravathi Thu, 03 Jul 2025 09:44:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Sekar babu slams Anubumani Ramadoss

    செங்கல்பட்டு நேதாஜி நகர் பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பம் சார்பில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவர் ஆன சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நேதாஜி நகர் பகுதியில் புதியதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 60% பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

    அப்போது பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். அப்போது பேசிய அமைச்சர், செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் சமையலறையுடன் கூடிய மலிவு விலை உணவகம் உருவாக்கப்பட வேண்டும், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கடைக்காரர்கள் சொல்லுகிற விலையை கொடுத்து தான் வாங்கி சாப்பிட வேண்டி உள்ளது. பேருந்து நிலையத்திற்கு வருபவர்கள் பெரும் பணக்காரர்கள் அல்ல, பேருந்து நிலையங்களில் ஒரு தோசை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், ஒரு இட்லி 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை எல்லாம் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டுமென பேசினார். 

    sekarbabu

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும், புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு அது வரப்பிரசாதமாக அமையும், மாமல்லபுரம் பேருந்து நிலையம் தொல்லியல் துறையின் ஒரு அனுமதிக்காக காத்திருக்கிறோம், அதற்கு ஒரு உண்டான தீர்வாக தொல்லியில் துறைக்கு தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பிக்கப்பட்டு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. விரைவில் அந்த பணிகள் முடித்துவிடப்பட்டு ஜனவரி மாதத்தில் மாமல்லபுரம் பேருந்து நிலையம் திறக்கப்படும். 

    இதையும் படிங்க: அப்பப்பா...!! சேகர்பாபுவை கொண்டாடி தீர்த்த முதல்வர்..! செயல்வீரர் என புகழாரம்..!

    sekarbabu

    கடந்த ஆட்சியைப் போல் அவர்கள் விட்ட பணிகளை நாங்கள் நிறைவேற்றுவது போல், நாங்கள் எடுக்கும் பணி எங்கள் காலத்திலேயே நிறைவேற்றி தரப்படும். மலிவு விலை உணவகம் தற்போது திறக்கப்படுகிற குத்தம்பாக்கம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், ஆவடி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மளிகை விலை உணவகம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் பல்வேறு சுய தொழில் செய்பவர்களிடம் கேட்டோம், சமைப்பதற்கு உண்டான இடங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குண்டான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம், நிச்சயமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் ஏற்படுத்தப்படும். 

    sekarbabu

    திமுக மீது கறை படிந்து உள்ளதாக அன்புமணி கூறியது குறித்து கேட்டபோது, தமிழ்நாட்டிற்கே மாறாத ஒரு கரையை அன்புமணி ராமதாஸ் ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டார். குடும்ப பாசம் என்னவென்றால், தாய் தந்தை பாசம் என்னவென்று தெரியாமல் பறந்து கொண்டிருக்கிறார். கறையைப் பற்றி அவர் சொல்லக்கூடாது. ஏற்பட்ட சம்பவம் வருந்தக்கூடியது, வருத்தமளிக்கிறது, ஏற்றுக்கொள்ள முடியாதது அதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும், போர்க்கால அடிப்படையில் நாலுகால் பாய்ச்சல் என்பார்கள், ஆனால் எட்டு கால் பாய்சலில் முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். முதல்வரே சிபிஐ விசாரணை நடத்தும் என கூறியுள்ளார். இது "சட்டத்தின் ஆட்சியில் சாத்தான்களின் ஆட்சி அல்ல" இதுபோன்ற துயர சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க அன்றைய தினமே காவல்துறையினரை அழைத்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி உள்ளார். 

    sekarbabu

    கடந்த கால ஆட்சி போல் குற்றம் நடந்து 10 முதல் 15 நாட்கள் கழித்து நடவடிக்கைக்கு செல்லவில்லை, என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமோ உச்சகட்ட நடவடிக்கைகளை முதல்வர் எடுத்திருக்கிறார். போராட்டங்களை பொறுத்தவரை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தப்படாமல் நடத்த வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் அதற்கு தனியாக இடத்தை ஒதுக்கி தந்து இருக்கிறது. திடீர் போராட்டங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால் தான் அனுமதி மறுக்கப்படுகிறது. ஜனநாயக முறையில் நடத்தப்படும் அனைத்து ஆர்ப்பாட்டத்திற்கும் இந்த ஆட்சி  அனுமதி அளித்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார்.

    இதையும் படிங்க: அண்ணா,பெரியாரை விமர்சித்து வீடியோ.. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அதிமுக! சேகர்பாபு கடும் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!

    மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!

    கிரிக்கெட்
    கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?

    கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?

    குற்றம்
    திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?

    திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?

    தமிழ்நாடு
    அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்‌ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!

    அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்‌ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!

    இந்தியா
    திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!

    திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!

    கால்பந்து
    செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்... ஐகோர்ட்டில் சரண்டர் ஆன தமிழ்நாடு அரசு...!

    செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்... ஐகோர்ட்டில் சரண்டர் ஆன தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!

    மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!

    கிரிக்கெட்
    கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?

    கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?

    குற்றம்
    திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?

    திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?

    தமிழ்நாடு
    அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்‌ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!

    அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்‌ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!

    இந்தியா
    திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!

    திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!

    கால்பந்து
    செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்... ஐகோர்ட்டில் சரண்டர் ஆன தமிழ்நாடு அரசு...!

    செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்... ஐகோர்ட்டில் சரண்டர் ஆன தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share