அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு கிராமங்களில் 5 கோடியே 20 இலட்சம் மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக நடத்திய முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா உங்களிடம் திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்கும்போது அதிமுகவினர் மேடையில் அமர்ந்திருந்தது அவமானகரமான சம்பவம்.

மேலும், அதிமுக என்பது அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அதிமுக மாறிவிட்டது. எப்போதும் திராவிட இயக்கத்தினர் என்று சொல்லிக் கொள்பவர்கள், நேற்று நடந்த சம்பவத்தை குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. இது ஒரு மிகுந்த அவமானகரமாக சம்பவமாக உள்ளது.
இதையும் படிங்க: சொர்ணபுரியில் இருப்பது போல உணர்வு.. முருக பக்தர்கள் மாநாட்டில் நெகிழ்ந்து பேசிய நயினார்..!

எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட மேடையில் எடப்பாடி பழனிசாமியை பேச விடாது, அமித்ஷா மட்டும் பேசி கூட்டணியை அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மௌன சாட்சியாக அமர்ந்திருந்தார்.

இது மெல்ல மெல்ல அமித்ஷா திராவிட முன்னேற்ற கழக மாறி வருவதை காட்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள். பெரியார், அண்ணா திராவிட இயக்க தலைவர்கள் வழியில் வந்த கொள்கைகளை பார்ப்பவர்கள். அவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐயா சேகர்பாபு அந்த 400 கோடிக்கு கணக்கு சொல்லுப்பா… பொன். ராதா சரமாரி கேள்வி!