கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக முழுவச்சில் தயாராகி வரும் நிலையில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பி உளிட்டோர் அடங்கியோர் உடன் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் தொகுதி பார்வையாளருடைய ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல அறிவுரைகளை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். குறிப்பாக கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் எனவும் உறுப்பினர் சேர்க்கையில் 30% பொது வாக்காளர்களாக கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய மண்டல பொறுப்பாளர்களும் மாவட்ட செயலாளர்களும் அடுத்து திமுக ஆட்சிதான் என்றும் மீண்டும் நீங்கள் தான் முதலமைச்சர் என்ற வகையில் பலரும் பேசி இருக்கிறார்கள். அதேபோல் பொதுமக்களிடம் பெறக்கூடிய குறைகளையும் கேட்டுக்கொண்டு பொறுமையுடன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
திமுக அரசு அமைந்த ஏராளமான திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கி திமுகவுடைய உறுப்பினராக அவர்களை சேர்க்க வேண்டும் என்றும் கடமைக்கு உறுப்பினர்களாக சேர்க்காமல் 30% புது வாக்காளர்களாக, புது வாக்காளர்களை திமுகவுடைய உறுப்பினரளாக சேர்க்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் அறிவுரை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!