கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான், இயக்கமாக இருந்ததை கட்சியாக மாற்றி அதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி கடந்த 2016-ல் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்திலும் தேர்தலை சந்தித்தது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை பெற்றதால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அதன்வசம் இருந்த கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்திருந்த சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்ந்தெடுத்தது நாம் தமிழர் கட்சி.
இதையும் படிங்க: "உள்ளாடையை எதுக்கு கழட்டணும்".. நீட் தேர்வு கெடுபிடிகளால் கண்கள் சிவந்த சீமான்..!
2024 நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்த நிலையில், அக்கட்சி நீண்ட நாட்களாக கேட்டுவந்த விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அந்த வகையில், கலப்பையுடன் விவசாயி இருப்பது போன்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சீமான், “மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாக்.-க்கு ஆதரவா பேசலாமா? அவங்கள கண்காணிக்கணும்! 3 பேரை கடுமையாக சாடும் எச்.ராஜா..!