தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் கள் இறக்கும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பெரியதாழை பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். சீமான் பனை மரம் ஏறுவதற்காக காலை முதலே அங்கிருந்த நிர்வாகிகள் பனை தோப்பில் இருந்த 2 மரத்தை சுத்தப்படுத்தி ஒரு மரத்தில் கயிறு கம்பு கட்டி மேலே ஏறி செல்லும் படிக்கட்டுகளை எல்லாம் அமைத்திருந்தனர். அதன் பின்னர், தொடர்ந்து கயிறு கம்பு கட்டி வைத்திருந்த பனைமரத்தில் ஒருவர் மேலே ஏறி மரத்தில் ஆய்வு செய்தார்.

அதன் பின் டீசர்ட் சாக்ஸ் அணிந்திருந்த சீமான் பதநீர் இறக்குவதற்கு தேவையான உபகரணங்களுடன் பனை மரத்தில் ஏறினார். அவர் பின்னால் மூன்றாவதாக பனைத் தொழிலாளி ஒருவரும் ஏறினார். மூன்று பேரும் பனை மரத்தின் மேல் 10 நிமிடங்கள் நின்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து மேல் இருந்த கள்ளை எடுத்துக்கொண்டு சீமான் கீழே வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கள் இயக்க தலைவர் நல்லுசாமி, துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கள்ளை சீமான் ஊற்றி கொடுத்தார். அனைவரும் கள் குடித்தபின் சீமானும் கள்ளை குடித்தனர்.
இதையும் படிங்க: போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?.. கிருஷ்ணசாமி எச்சரிக்கை!!

ஆனால் சீமான் நடத்திய இந்த கள் இறக்கும் போராட்டம் சோசியல் மீடியாவில் கேலி கூத்தாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பனை மரத்தில் படிக்கட்டு வைத்து ஏறிய சீமானை நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, நன்றாக பனைமரம் ஏறத் தெரிந்த பலரும் தாங்கள் பனைமரம் ஏறும் வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, உண்மையான ஆணாக இருந்தால் இப்படி மரம் ஏறி கள் இறக்கியிருக்க வேண்டும் என்றும், இப்படியெல்லாம் பனைமரம் ஏற யாராவது படிக்கட்டு வைப்பாங்களா? என்றும் சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் நாம் தமிழர் தம்பிகள் திணறி வருகின்றனர்.
பனை மரத்தில் படிக்கட்டு செய்த ஒரே கும்பல் நீதாம்லே, சீமான் பனை ஏற இப்படியாலே ஏறி கள் எறக்குவாங்க 😆😆 காமெடி பன்றயேல
மரத்துக்கு மேல வாளி ஒன்ன தூக்கிட்டு போறான் பாருங்களேன் 🤭🤭 pic.twitter.com/xGEkQ0LpVL
— கபிலன் (@_kabilans) June 15, 2025
இதையும் படிங்க: சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!