தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் மார்ச் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. வேட்பாளர்களையும் ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வந்தவாசி தொகுதி வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணேஷ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தேர்தல் சமயத்தில் நடைபெற்ற ஒரு கொள்கை பரப்புரைக் கூட்டத்துடன் தொடர்புடையது.வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளராக பொறியாளர் கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியினர் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டம் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!
தேர்தல் விதிமுறைகளின்படி, பொதுக்கூட்டங்கள், பிரசார நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு உரிய அனுமதி பெறுவது கட்டாயமாகும். இதனை மீறியதாகக் கருதி, வந்தவாசி காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன்பேரில் வேட்பாளர் கணேஷ், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் துருவன் செல்வமணி உள்ளிட்ட மொத்தம் ஆறு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாதகவில் இருந்து விலகி தவெகவில் இணைய தயார்... விஜய்க்கு ஓபன் சவால் விட்ட சாட்டை துரைமுருகன்...!