சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்து அவரது தாய் மற்றும் சகோதரரிடம் ஆறுதல் கூறினர் பின்னர் செய்தியாளர்களும் சந்தித்தபோது, காவல்துறையினர் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு நடக்காமல் விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். மருத்துவ அறிக்கையின் வாயிலாக காவலர்களின் அத்துமீறலை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். மடப்புரத்தில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு காவல்துறை அத்திமீறி உள்ளது என்றவர், அதிமுக மீட்பு குழுவின் சார்பில் நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறை தட்டி கேட்காததால் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வந்துள்ளது. இந்த சூழ்நிலை மாற வேண்டும். இல்லை என்றால் திமுக மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என கூறினார். திறமையாக வாதாடி தவறு செய்தவர்கள் குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணையுமா என்பதை சொல்வதற்கு நான் ஒன்றும் ஜோசியர் அல்ல என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக தொண்டர்களின் உரிமைகளை காப்பாற்றிட நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என கூறினார்.

விஜய் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே விஜய் பற்றிய கருத்தை நான் சொல்லி இருக்கிறேன்.
இப்பொழுதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது கொள்கை கோட்பாடு எதை நோக்கி செல்கிறது என்பதை வைத்துத்தான் கருத்து சொல்ல முடியும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் உறவினருக்கு ஸ்கெட்ச் போட்ட சிபிஐ... சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!
இதையும் படிங்க: ஓபிஎஸ் எம்.எல்.ஏ பதவிக்கு ஆப்பு?... சபாநாயகர் அப்பாவுக்கு பறந்த புகார்...!