தமிழகத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பெரும் பங்களிப்பு செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் கடந்த 10 நாட்களில் மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அவர் தொடங்கி வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் இதை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி திருச்சி பஞ்சப்பூர் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய திட்டங்களை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இதில் மிக முக்கியமானவை:
இதையும் படிங்க: அடுத்தடுத்து தமிழகம் விசிட்! பக்கா ப்ளானில் பிரதமர் மோடி!! மார்ச் -1ல் மதுரை! அடுத்தது வேலூர்! களைகட்டும் தேர்தல்!
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி மதிப்பீட்டில் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 8.8 லட்சம் வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கப்படும். சென்னை மணலியில் ரூ.1,490 கோடி மதிப்பிலான மசகு எண்ணெய் கலவை ஆலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தி திறனை வலுப்படுத்தும்.

பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகள் திறந்து வைக்கப்பட்டன. கங்கைகொண்ட சோழபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை 81-இல் பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ரயில்வே துறையில் 5 புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. நெல்லை–மங்களூர் விரைவு ரயில், ராமேஸ்வரம்–மங்களூர் விரைவு ரயில், மயிலாடுதுறை–காரைக்குடி ரயில், நாகர்கோவில்–சர்லாப்பள்ளி அம்ரித் பாரத், கோவை–தன்பாத் அம்ரித் பாரத் ஆகியவை இதில் அடங்கும்.
இத்தகைய திட்டங்கள் தமிழகத்தின் உள்கட்டமைப்பு, எரிபொருள் விநியோகம், கிராமப்புற இணைப்பு, ரயில் போக்குவரத்து ஆகியவற்றை பன்மடங்கு மேம்படுத்தும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வாரி வழங்கி வருவதை அவர் பாராட்டியுள்ளார்.
தமிழக மக்கள் சார்பில் பிரதமருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: வேஷ்டி, சட்டையுடன் திருச்சி விஜயம்!! உற்சாகம்!! ரூ.5650 கோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!