திருச்சி: தமிழக மக்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையில் அலங்கரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வந்தடைந்தார். கேரளாவில் காலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, தனி விமானம் மூலம் மாலை 4.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர், விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் பஞ்சப்பூர் விழா மைதானத்துக்கு சென்றார்.
அங்கு முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே துறை சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர், மொத்தம் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் மிக முக்கியமானவை:
நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டத்துக்கு ரூ.3,680 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். சென்னை மணலியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.1,490 கோடி முதலீட்டில் அமையும் மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதையும் படிங்க: நாளை திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!! புதிய கட்டுப்பாடுகள் அமல்!! பாஜ தொண்டர்கள் உற்சாகம்!
#WATCH | Tamil Nadu: Speaking at the launch of various development initiatives in Tiruchirappalli, PM Modi says, "It gives me great pleasure to be here in this wonderful city of Trichy. Today's program is an important one for the future of Tamil Nadu. It is related to projects… pic.twitter.com/GqwXEgFdzH
— ANI (@ANI) March 11, 2026
பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைத்தார். தேசிய நெடுஞ்சாலை 81-இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
ரயில்வே துறையில் 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன்பிறகு அதே இடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது பலமுறை வேட்டி-சட்டை அணிந்து வருவது வழக்கமாகி வருகிறது. இம்முறையும் தமிழ் மக்களின் பாரம்பரியத்தை மதித்து அணிந்து வந்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் எரிபொருள் விநியோகம், சாலை இணைப்பு, ரயில் சேவை மேம்பாடு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு விசிட்!! மார்ச் -11-ல் திருச்சி வருகை!! பம்பரமாய் வேலை பார்க்கும் பாஜக!