நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்துப் போராடியதற்காகச் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து ஒன்றிய அரசின் மீதும் கூட்டணி விவகாரங்கள் குறித்தும் அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தொடர்ந்து அவர் பேசியாதாவது,
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி 'சீனா', 'அதானி' அல்லது 'எப்ஸ்டீன் ஃபைல்ஸ்' என எதைப் பற்றிப் பேசத் தொடங்கினாலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் கூச்சலிட்டு அவரைப் பேசவிடாமல் தடுக்கின்றனர். 18 மணி நேர விவாதத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 4 மணி நேரத்தில், வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்பட்டார். இதனைத் தட்டிக் கேட்டதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த என்னையும், தோழர் வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்பிக்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மோடிக்கு நாடாளுமன்றம் வரவும், கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் பயமாக இருக்கிறது.
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில் அனில் அம்பானி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹரிந்தர் பூரி ஆகியோருக்குப் பிரதமருடன் இருக்கும் தொடர்பு குறித்துப் பேசினால் மோடி அரசு அஞ்சுகிறது. ட்ரம்ப் உடனானத் தனிப்பட்ட உறவிற்காக இந்திய விவசாயிகளைப் பிரதமர் மோடி அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார். வரும் 5 ஆண்டுகளில் 500 கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையில் குவியப் போகின்றன. இது இந்திய விவசாயத்தை அடியோடுச் சிதைக்கும் ‘மாபெரும் சதி’ திட்டமாகும்.
இதையும் படிங்க: விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!
உடனானத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி கடந்த டிசம்பர் 3-ஆம் தேதியே 5 பேர் கொண்டக் குழுவை அமைத்துவிட்டது. ஆனால் கடந்த 36 நாட்களாகத் திமுக தரப்பிலிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. நாங்கள் தோழமைகளை மதிப்பவர்கள் என்பதால் பொறுமையாகக் காத்திருக்கிறோம். உரிய மரியாதையை வழங்க வேண்டியது திமுகவின் கடமை. 39 காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் காந்தி தனித்தனியாகக் கருத்து கேட்டுள்ளார்; அதில் பெரும்பாலானோர் மரியாதையான இடப்பகிர்வு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்” என்றார்.
மதுரை எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களில் மத்திய அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், '80 சதவீத வேலை முடிந்தது' என்று அமைச்சர்கள் பொய் கூறி வருவதாகவும் அவர் சாடினார். ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதையும், போட்டித் தேர்வுகள் குளறுபடிகளால் ரத்து செய்யப்படுவதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.
இதையும் படிங்க: “இந்திய வம்சாவளியினரின் சாதனைகள் நமக்குத் தனிப் பெருமை!” மலேசியாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!