அன்புமணிக்கும் தனக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் நேற்று பேசி இருந்தார். அன்புமணி பிரச்சினையில் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றால் தீர்வு ஏற்படலாம் எனவும் கூறியிருந்தார்.

அன்புமணி மட்டுமில்லாத அவரது மனைவி சௌமியாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார் ராமதாஸ். தான் படித்த முயலுக்கு மூன்று கால் என அன்புமணி செயல்படுவதாகவும், மாவட்டச் செயலாளர்களை மிரட்டுவதாகவும், அன்புமணி பொறுமையாக இருந்திருந்தால் நானே முடிச்சூட்டு விழா நடத்தி இருப்பேன் என்றும் ராமதாஸ் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சாமின்னு நெனச்சோம்.. கல்லுனு புரிஞ்சிக்கிட்டோம்! ராமதாசை தாக்கும் அன்புமணி ஆதரவாளர்கள்!

குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துவதாகவும், ஐயா எனக்கு ஒரு மானபங்கம் படுத்துவதாகவும் கடும் விமர்சனங்களை முன் வைத்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணியை கட்சியை விட்டு ஒருபோதும் நீக்க மாட்டேன் என்றோம் 2026க்கு பிறகு அன்புமணி தான் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்., நான் கட்டி வளர்த்த கட்சிக்கு இரண்டு ஆண்டுகள் நான் தலைவராக இருக்கக் கூடாதா என்றும் கேள்விகளுக்கு இருந்தார்.

இந்த நிலையில் சாமி என நினைத்தோம்., கல் எனப் புரிந்தது என்று பல்வேறு விமர்சனங்களை அன்புமணிக்கு ஆதரவளிக்கும் பாமக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட தொடங்கினர். இந்த நிலையில் தான் உயிரோடு இருக்கும் வரை நானே பாமக தலைவர் என ராமதாஸ் கூறியுள்ளார். நான் நூறு வருடம் உயிர் கூட இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் அரசியல் வரக்கூடாது என்ற வார்த்தையை காப்பாற்ற முடியவில்லை என்றும் 100 சதவீதம் பாமக தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்த ராமதாஸ், பிள்ளைகள் தங்களது தாய் தந்தையை மதிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர் என வேதனை தெரிவித்த அவர், மூத்தவர் சொல், வார்த்தை எல்லாம் பொய் என்கிறார் அன்புமணி என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறாரா அன்புமணி? ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!!