தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய தவெக எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேர விவகாரத்தில் இதுவரை இதுவரை திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
அடுத்தகட்டமாக, இந்த மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. காவல் விசாரணைக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்த தகவல்களையும், அவர்களிடமிருந்து விரிவான வாக்குமூலங்களையும் பெற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வழக்கில் மிக முக்கிய குற்றச்சாட்டுக்குரிய நபராக அசோக் குமார் பெயர் முதல் தகவல் அறிக்கையின் குற்றஞ்சாட்டப்பட்டோர் பட்டியலில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமாரை கைது செய்தால்தான் இந்த வழக்கின் முழு உண்மை வெளிவரும் என காவல்துறை கருதுகிறது.
இதையும் படிங்க: இன்று தொடங்கவிருந்த வகுப்புகள்... தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... !

இதற்காக அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை அசோக் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் சிக்கவில்லை. அதேபோல் கரூரிலும் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், அங்கும் அவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவரிடம் முறையான விசாரணை நடத்தப்பட்டால்தான் இந்த வழக்கின் உண்மை நிலை முழுமையாக தெரியவரும் என்று காவல்துறை நம்புகிறது.
இந்த வழக்கில் முக்கியமாக ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச் சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. தாமாக முன்வந்து காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக அசோக் குமாரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு, இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிர்ந்த அறிவாலயம்... செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு... குதிரை பேர விவகாரத்தில் அதிரடி...!