• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Editor Sat, 28 Jun 2025 14:29:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    protest-demonstration-in-trichy-on-the-3rd-eps-announces

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    DMK

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில், மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித் தரப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா வேதனையை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: 85 வயது மூதாட்டியை அடித்தே கொன்ற நிர்வாகி.. அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்..!

    அந்த வகையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு சீர்கேடுகளால் மக்கள் கடும் அவதியுற்று வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு :

    திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 40 ஏக்கர் பரப்பளவில் சுமார் 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3600-க்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், திமுக அரசின் முதல்-அமைச்சரால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.

    திருச்சியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த சிறிய மழைக்கே, புதிய பேருந்து நிலையக் கட்டடம் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரைகளின் வழியே மழைநீர், பயணிகள் நிற்கும் நடை மேடையில் விழுவதை பொதுமக்கள் கிண்டலடித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    DMK

    பஞ்சப்பூரில் பேருந்து முனையம் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. நிர்வாகத் திறனற்ற திமுக அரசு இம்முனையத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்யாமல் அவசர கதியில் திறந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, திருச்சியில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், வெளியூர்களில் இருந்து திருச்சி மாநகருக்குள் வந்து செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் மற்றும் தலைமைத் தபால் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செல்வதால், மாநகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

    DMK

    திருச்சி மாநகரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, போக்குவரத்து நெரிசலால் திருச்சியே சில நேரங்களில் ஸ்தம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக திருச்சி மாநகர மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.

    பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், தார் உருகியும் பள்ளங்கள் ஏற்பட்டு, பார்ப்பதற்கு வேகத் தடைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் பழுதடைந்துவிடுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பிரதான சாலையான பாலக்கரை சாலையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலை மறியல் போட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், மக்களை நாள்தோறும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    DMK

    இந்நிலையில், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும்; திருச்சி மாநகரில் கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரெயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும்; பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும்; பாலக்கரை சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில், 3.7.2025 வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையிலும்; திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும்.

    DMK

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற திமுக அரசையும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் லாரி ஏற்றிக் கொலை? திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறி விட்டதா? கொந்தளிக்கும் இபிஎஸ்..!

    மேலும் படிங்க
    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    குற்றம்
    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியா
    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    இந்தியாவில் அறிமுகமான 2025 TVS Apache RTR 200 4V.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

    இந்தியாவில் அறிமுகமான 2025 TVS Apache RTR 200 4V.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    இந்தியா

    செய்திகள்

    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    குற்றம்
    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியா
    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    இந்தியா
    ஈரானுக்கு 1000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்போகும் அமெரிக்கா - கதறும் இஸ்ரேல்...!

    ஈரானுக்கு 1000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்போகும் அமெரிக்கா - கதறும் இஸ்ரேல்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share