2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகமும் களம் காணும் என அக்கட்சி தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் தளபதி விஜய்யும் படப்பிடிப்பை எல்லாம் படபடவென முடித்துவிட்டு கட்சிப் பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறது.

நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபேன் எனக்கூறப்படுகிறது. அவரைப் பார்த்து தான் சினிமாவிற்கு நடிக்க வந்தார். நாளாக நாளாக கங்கா சந்திரமுகியாக மாறிய கதையாக தன்னைத் தானே சூப்பர் ஸ்டார் என நினைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். அதற்கு ஏற்றார் போல் பல படங்களில் ரஜினிகாந்தை தாங்கி பஞ்ச் டைலாக் வைப்பது, பாடல் வரிகளில் நக்கலடிப்பது என தனது படத்தில் செய்யாத சித்து வேலைகள் கிடையாது. விஜய்யின் இந்த செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வந்த ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற “பட்டத்தை பறிக்க நூறு பெரு” என்ற பாடல் மூலமாக பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: இனி இதை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது... தவெக தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

உண்மையில் அந்த அளவிற்கு விஜய், சினிமாவில் உச்சம் தொட்டிருந்தாலும் இப்போதும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினியின் புகழையோ, சம்பளத்தையோ ஓவர் டேக் செய்ய முடியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாராம். ஒருவேளை ரஜினி ரிட்டையர்மெண்ட் வரை காத்திருந்தால் அது கைகூடியிருக்கும் ஆனால், விஜய் தான் இப்போது சினிமாவில் இருந்து வாலண்டரி ரிட்டயர்மென்ட் வாங்கியிருக்கிறார். சினிமாவில் தான் இப்படி ரஜினியை நிறைய விஷயங்களில் காப்பியடித்தார் விஜய் என்றால், அரசியலிலும் அவர் பாணியையே கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பாட்ஷா. அதில் ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கம் கேரக்டரில் தலைவர் வேற லெவலுக்கு பின்னிப்பெடலெடுத்து இருப்பார். அந்த ஆட்டோ டிரைவர் கதாபாத்திரம் தான் ரஜினிகாந்தை பட்டி, தொட்டியில் இருக்கும் மக்களிடம் எல்லாம் கொண்டு சேர்ந்தது. இதனையெல்லாம் கணக்குப் போட்டு பார்த்தாரோ என்னவோ, விஜய் வர உள்ள 2026ம் ஆண்டு தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளாராம். ஏன் இந்த திடீர் முடிவு என பனையூர் வட்டாரத்தில் விசாரித்தால், இல்ல பாஸ் நடுத்தர மக்களோட கனெக்ட் ஆகுற மாதிரி ஒரு சின்னம் வேணுன்னு தலைவர் ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தாரு.

அப்போ டக்குன்னு தோணுனது தான் இந்த ஆட்டோ சின்னம். ஏன்னா பெரும்பாலான நடுத்தர மக்கள் அதிக அளவுல பயன்படுத்தக்கூடிய வாகனமான ஆட்டோவை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துனா அவங்க கிட்ட சீக்கிரம் கனெக்ட் ஆகிடலான்னு நினைக்கிறாரு அப்படின்னு சொல்லுறாங்க. இதில் கூடுதலாக கிடைத்திருக்கக்கூடிய தகவல் என்னவென்றால், விசிகவில் இருந்து தவெகவிற்கு தாவிய ஆதவ் அர்ஜுனாவும், தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமியும் இணைந்து வர உள்ள சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து களம் கண்டால் செம்ம மாஸாக இருக்கும் என விஜயை பிரைன் வாய்ஸ் செய்து வருகிறார்களாம். இதனால் கூட்டணி பக்கம் செல்லலாமா? அல்லது சீமான் போல் தனித்து நின்று பார்க்கலாமா? என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்.
இதையும் படிங்க: விஜய் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரம்.. திமுக - தவெக இடையே கடும் மோதல்.. 3 பேர் மண்டை உடைப்பு..!