தமிழக வெற்றி கழகம் சார்பில் கட்சியுடைய தலைவர் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு அனைத்து இடங்களிலும் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. இதில் சென்னைக்கு உட்பட்ட மத்திய மாவட்டம் ஒன்றில் வைக்கப்பட்ட பேனர் வயதான முதியவர் மீது விழுந்து படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக நேற்று தவெகவைச் சேர்ந்த 4 பேர் வில்லிவாக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியாகியுள்ளனர். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தவெக சார்பில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், நெடுஞ்சாலை ஓரங்களில் கட்சியின் சார்பில் எந்த காரணத்திற்காகவும் பேனர் வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டிருக்கிறார். மேலும் கட்சியுடைய தலைவர் விஜய்க்கு பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை எனவும், எனவே தலைவருடைய உத்தரவை மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை எந்த சூழலிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பர பதாகைகளோ கட்சியின் சார்பில் வைக்கப்படவில்லை என்பதையும் இந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரம்.. திமுக - தவெக இடையே கடும் மோதல்.. 3 பேர் மண்டை உடைப்பு..!
இதையும் படிங்க: தங்க தலைவா... தமிழகத்தை ஆள வா! விஜய் பிறந்தநாளுக்கு அருண்ராஜ் உற்சாக வாழ்த்து!!