மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பங்கேற்கவில்லை. இதை அடுத்து அவரிடம் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், நான் ஹைதாராபாத் சென்றிருந்ததால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு போக முடியவில்லை. முருகன் என்னோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். என்னால் மாநாட்டில் பங்கேற்க முடியாததால் இது குறித்து வீடியோவை பதிவு செய்து அனுப்பியிருந்தேன்.

நீங்கள் அதை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மாநாடு சிறப்பாக நடைபெற்றது. என்னால் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் பக்தர்கள் மாநாட்டில் பெரும்பாலும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு வீடியோவை பதிவிட்டு அனுப்பியிருந்தேன். மாநாடு நல்லபடியாக நடந்திருக்கிறது சந்தோஷம். முருகன் மாநாட்டில் என்ன அரசியல் இருக்கிறது எனக்கு புரியவில்லையே! சில காலகட்டங்களில் சில வழிபாடுகளை மறந்து விடுவாரோ என்று எண்ணி அதை நினைவுபடுத்துவது தவறா?
இதையும் படிங்க: நீட் மோசடி... எஜமான்கள் கிட்ட பம்மி கிடக்குது ADMK! முதல்வர் காட்டம்..!

இஸ்லாமிய சகோதரர்கள் வெள்ளிக்கிழமை ஆனால் மசூதிக்கு செல்கிறார்கள். கிறிஸ்தவ சகோதரர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆனால் தேவாலயத்திற்கு செல்கிறார்கள். அப்படி நாமும் ஒரு நாளை வைத்துக் கொண்டு வழிபட்டு தானே வருகிறோம். வழிபாட்டை நினைவுபடுத்துவது அரசியலா? நாங்கள் சாமி கும்பிட்டால் அது கட்சி நீங்க எல்லாம் போய் பார்த்தால் அது கட்சி இல்லையா? இது நியாயமா! இந்த நிகழ்வு ஆன்மீகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் நடத்தப்பட்டது.

பக்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் நடத்தப்பட்டது. ஆனால் சிலர் இதை அரசியல் ஆக்குகிறார்கள். இதை அரசியலாக்க முயற்சிப்பது தவறு. சாமி கும்பிட சொல்வது தவறா? எங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் சாமி கும்பிட சொல்கிறோம். இதை இப்படியே விட்டால் சாமி கும்பிடுவது வழக்கத்தில் வந்து போய்விடும். அதை அப்படியே மழுங்க செய்வது சரியா? எல்லோருக்கும் எல்லா விஷயத்திலும் நினைவூட்டல் என்று ஒன்று தேவை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியல்.. முருகன் பெயரால் பெரும் பதட்டம்.. முத்தரசன் ஓபன் டாக்!!