பாட்டாளி மக்கள் கட்சியில் அப்பா - மகன் இடையிலான விரிசல் கொஞ்சம், கொஞ்சமாக பெரிதாக ஆரம்பித்திருக்கிறது. இந்த பிரச்சனைக்கு பெரும்பான்மையான காரணமே அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி தான் எனக்கூறப்படுகிறது. இருக்கிற பிரச்சனைகள் எல்லாம் போதாது என புதுசு, புதுசாக வேறு அவர் சர்ச்சைகளை கிளப்பி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த முகுந்தன் அன்புமணியுடன் இணக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்புமணியை கடுமையாக விமர்சித்து வரும் காடுவெட்டி குருவின் மகன் மகன் கனலரசனை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் செளமியா அன்புமணி. பசுமை தாயகத்தைச் சேர்ந்து ஒரு முக்கிய நிர்வாகியிடம், காடுவெட்டி குருவின் மகனை தன்னைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும், அவர்கள் குடும்பத்திற்கு இருக்கும் ஒட்டுமொத்த கடனையும் அன்புமணி அடைத்துவிடுவார். பாதியில் நிற்கும் வீட்டைக்கூட கட்டிக்கொடுத்துவிடலாம். சின்னய்யாவுக்கு சப்போர்ட்டாக நிற்கச் சொல்லுங்கள்” என செளமியா தூது அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அண்டை மாநிலங்களில் அணைகட்ட கூட தமிழ்நாட்டு மண்.. கொள்ளையின் கோரமுகம்.. சீமான் காட்டம்..!

இதைக் கேட்டு கடுப்பான கனலரசனோ, “அன்புமணிக்கும், செளமியாவுக்கும் எங்கள் குடும்பம் கஷ்டத்தில் இருப்பது இப்போ தான் கண்ணுக்கு தெரிஞ்சிதா?. இத்தனை வருஷமா இல்லாம இப்ப எதுக்கு எங்க மேல திடீர்னு இவ்வளவு அக்கறை?” என வந்த முக்கிய புள்ளியிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், அன்புமணியையோ சவுமியாவையோ சந்திக்க தாம் விரும்பவில்லை எனவும் முகத்தில் அடித்தது போல சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த தகவலை செளமியாவிடமும் அந்த முக்கிய நிர்வாகி தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நாளுக்கு நாள் நிலைமை கைமீறிப்போவதை புரிந்து கொண்ட செளமியா அன்புமணியோ காடுவெட்டி குருவின் குடும்பத்தை தங்கள் பக்கம் வளைத்தே ஆக வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். இதற்காக காடுவெட்டி குருவின் குடும்பத்திற்கு நெருக்கமான மருத்துவர் தமிழரசி மூலம் கனலரசுவிடம் பேச முயற்சித்துள்ளார். அந்த முயற்சியும் பலனளித்திருக்கிறது. தமிழரசி சொன்னதற்காக செளமியாவின் போனை எடுத்த கனலரசன், “நாங்கள் தனி இயக்கம் என தனி பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டோம். உங்க குடும்ப விவகாரத்துல எங்கள இழுக்காதீங்க. இதுல எங்களால தலையிட முடியாது” எனச் சொல்லி பட்டென போனைக் கட் செய்துவிட்டாராம். கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்க தயாராக இருந்தாலும் கனலரசு பிடிகொடுக்காதது அன்புமணி டீமிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: இவங்களுக்கு மட்டும் தான் அடுத்து எம்.எல்.ஏ. சீட் தருவேன்”... ஓபனாக உடைத்து பேசிய ராமதாஸ்... பாமகவில் பரபரப்பு!