திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர், அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் தீரன், பொருளாளர் சையத்மன்சூர் உசேன், சமூக நீதி பேரவை தலைவர் கோபு, சேலம் மேற்கு எம் எல் ஏ அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவில் 34 அமைப்புகளுடன் கட்சியை நடத்தி வரும் தானே தலைவர் என்பதால் தனக்கே முழு அதிகாரம் உள்ளதாகவும், மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்களே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக இருப்பார்கள் என்றும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு இருக்கத்தான் செய்யும் அப்படியாக ஒரு தீர்வு வரும் என்றும் பாமகவை தொடர்ந்து 46 ஆண்டு காலமாக கட்சி, சங்கம் இரண்டையும் வழிநடத்தி வருவதாகவும் சங்கத்தின் தலைவராக புதா.அருள்மொழியும் கட்சியின் தலைவராக நானும் உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் என்ன செத்தா போயிட்டேன்? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

பாமகவில் 34 துணை அமைப்புகளை உருவாக்கி அதற்கெல்லாம் தொடர்ந்து வழிகாட்டி வரும் தான் இந்த 34 அமைப்புகளும் திறம்பட செயல்பட உற்சாகப்படுத்தி அவர்களுடைய பணியை வேகமாக தொடர செய்ய உள்ளதாகவும் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ளதால் அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாமக பெறப்போவதாகவும்,இங்கே வந்துள்ள மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் மாநில பொறுப்புகளுக்கு தான் தேர்தலில் போயிட்ட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து கூட்டணி முடிவாகவில்லை எனக்கூறிய ராமதாஸ், நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறுகின்ற கூட்டணியாக இருக்குமென தெரிவித்தார். பாமகவில் எல்லா அதிகாரங்களும் தனக்கு உண்டு என்பதால் தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நல்ல நல்லவர்களை வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினராக ஆக்குவேன் என கூறினார்.

இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா அவமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் யாரையும் இழிப்படுத்தக்ககூடாது, அது தவறு என பதில் கூறினார்.
அதனை தொடர்ந்து பாமவில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினராக அருளை கட்சியின் இணைப்பொதுச் செயலாளராக நியமிப்பதாக தெரிவித்தார். கெளரவ தலைவர் ஜி கே மணி உடல் நலக்குறைவால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ராமதாஸ் கூறினார்.
இதையும் படிங்க: கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!!