சென்னையில் உள்ள மதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இப்போது தமிழகத்தில் உள்ள முக்கியமான கட்சிகளின் ஒன்று மதிமுக. வைகோ தலைமையில் இயங்கும் மதிமுகவின் தலைமை அலுவலகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இதற்கிடையே சென்னையில் உள்ள மதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக - மதிமுக கூட்டணியா? உண்மையை உடைத்த துரை வைகோ !!

தாக்குதல் தொடர்பாக மதிமுக சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கல் வீசி தாக்குதல் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் தலைமை அலுவலகம் உள்ளே சென்ற மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக நிறுத்தியதை எடப்பாடி வழங்குவார்... எதை தெரியுமா? அடித்து சொன்ன செல்லூர் ராஜூ!!