திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்காவில் பக்தர்களால் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் ரூ 22கோடி மதிப்பீட்டிலான புதிய ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபத்தின், கருங்கல் கட்டுமான திருப்பணியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
முன்னதாக கோவில் கட்டுமான திருப்பணி மேற்கொள்ளப்படும் இடத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் பார்வையிட்டார். கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் ௹ 22 கோடி நன்கொடை நிதி பெற்று இந்ததிருப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
பின்னர் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். திருக்கோயிலில் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபத்தின் கருங்கல் கட்டுமான திருப்பணியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் கே.ஆர்.பிச்சுமணி ஐயங்கார் எழுதிய 'குணசீல மஹாத்மியம்', சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய 'வள்ளுவத்தில் மெய்ஞானம்' ஆகியோரது நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று நூல்களை வெளியிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும் தான். பாரதம், ராஷ்ரீயம், தர்மம் ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. சமூகமும், தர்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
இதையும் படிங்க: நீதி பரிபாலன வரலாற்றில் தீரா களங்கம்.. துணைவேந்தர் நியமன சட்ட தடைக்கு முத்தரசன் எதிர்ப்பு.!

திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம். 'முக்தி' பற்றி பேசவில்லை என கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மீகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள்.
நாம் யார் என்பதை இன்றைக்கு வெளியிட்ட புத்தகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தகைய சிந்தனையை நமக்கு கல்வி பாடத்திட்டங்கள் கொடுக்கவில்லை. பாரத தேசம் ஒரு ஆன்மீக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என்று பேசினார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எந்த அடிப்படையில் கேக்குறீங்க.? ஜனாதிபதியை தெறிக்கவிட்ட திமுக கூட்டணி கட்சி!