பாமக, பாஜக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை. ஆனால் பாஜக இருப்பதால் அது முடியாது.

பாமக, பாஜக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது. தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதுதான் வரலாறு. என் உயரம் என்ன என்பது எனக்கு தெரியும். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை வைக்க சூழல் கனியவில்லை.
இதையும் படிங்க: மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் திருமா... அமித் ஷா மீது பகீர் குற்றச்சாட்டு...!

நட்பின் அடிப்படையில் அதிமுகவின் வைகைச்செல்வனுடன் சந்திப்பு நடந்தது அவ்வளவுதான். நாங்கள் எந்த அரசியலும் பேசவில்லை. அவர் எனக்கு ஒரு நல்ல புத்தகத்தை வழங்கினார். ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் விசிக கொடி அகற்றப்படுகிறது.

பல பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளித்து போராடி, ஆளுங்கூட்டணியில் நீடிக்கிறோம். அரசியலில் எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையை மட்டும் கருத முடியாது. அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம் தேவை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமாவளவனை சந்தித்தது எதற்கு? உண்மையை போட்டுடைத்த வைகைச் செல்வன்!!