தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்தவித பிரிவினைகள் பாகுபாடுகள் கிடையாது சங்பரிவார் போன்ற அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்தவித பிரிவினைகள் பாகுபாடுகள் கிடையாது சங்பரிவார் போன்ற அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என்பதுதான் நம்முடைய வரலாறு. அதற்கு நேர் மாறாக ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் அமைப்புகள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இதையும் படிங்க: எனக்கு வார்னிங் தர்றீங்களா?... அமித் ஷாவுக்கே ஆட்டம் காட்ட ஆரம்பித்த அண்ணாமலை... பதற்றத்தில் பாஜக...!

தமிழகத்தில் எந்த மதத்திலும் முரண்பாடுகள் இல்லை. சகோதர வாஞ்சையோடு அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் வாழ்ந்த நிலையில் இங்கே மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேட சங் பரிவார அமைப்புகள் முயற்சிக்கின்றன. அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் பிரச்சனை. அந்தப் பகுதியை சார்ந்தவர்களோ, அந்த வழிபாட்டுக்கு வருகிற பக்தர்களும் யாரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான எவ்வித கருத்துக்களை சொல்லவில்லை. அப்படி ஒரு முரண்பாடு இல்லாத போது சங் பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கே முரண்பாடுகளை உருவாக்கும் முயற்சிக்கிறார். இதனை மதுரை பகுதியை சேர்ந்த மக்கள் சூதுக்கும் சூழ்ச்சிக்கும் பழியாக மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஆட்சியில் பங்கு விசிக முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது அதற்கு ஆதரவான சூழல் இல்லை. சங் பரிவார் அமைப்புகள் அதிமுகவுடன் சேர்ந்து வலிமை பெற முயற்சிக்கிற சூழலில் அதனை முறியடிக்க வேண்டும் என்பதில்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 2015-16 காலகட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற பெயரில் கருத்தரங்கத்தில் நாங்கள் ஒருங்கிணைத்தோம். அப்போது நான் இந்த கருத்தை பேசிய போது பலரும் அதை நகைப்புக்குரியதாக பார்த்தார்கள் இன்றைக்கு அதை எல்லோரும் பேசுகிறார்கள். அன்றே அனைவரும் கை கொடுத்திருந்தால் வலு கூடி இருக்கும். இப்போது அவர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள் அந்த கருத்தில் நாங்கள் மாறுபடவில்லை உடன்படுகிறோம். கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்கிற நிலைப்பாடு கிடையாது. ஆனால் அந்த கோரிக்கை வைக்கின்ற சூழல் தற்போது கனியவில்லை.
முருகர் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமா, வந்தவர்களை மரியாதை நிமித்தமாக வரவேற்று சந்தித்தோம் முருக பக்தர் மாநாட்டை நடத்தக்கூடாது என நான் சொல்ல முடியாது. ஆனால் நானும் பள்ளிக்காலத்தில் முருகனை வழிபட்டு பக்தனாக இருந்திருக்கிறேன். முருகனை வழிபடுவதற்கான கோரிக்கைகளை கேட்டேன் சொன்னார்கள். நட்பு அடிப்படையில், மரியாதை நிமித்தம் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது என்றார்.
இதையும் படிங்க: பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. அண்ணாமலைக்கு அமித்ஷா ஸ்ட்ரிக்ட் வார்னிங்..!