சட்டப்பேரவையில் இன்று மூன்று முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளதால், அத்துறைகள் சார்ந்த பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் சட்டப்பேரவை இன்று அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கடந்த 12ஆம் தேதி அமைச்சர்களின் பதிலுரையும் முடிவடைந்தது. தற்போது பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இரண்டு நாள் வார விடுமுறைக்குப் பின்னர் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கவனிக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்தும் விவாதம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம்! திமுக என்ன செய்தது? என அமைச்சர் வன்னியரசு கேள்வி!
முதலமைச்சர் வசமுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சொத்து வரி உயர்வு, மழைக்காலத்தை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறையில் தவெக நிர்வாகிகள் பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் எடுப்பது, திருவொற்றியூரில் பள்ளி மாணவர் கொலை, பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தியது உள்ளிட்ட பிரச்சனைகள் எழுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்கல்வித் துறையில் இடதுசாரி மாணவர்கள் மற்றும் சிஜேபி போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை, கோவை கல்லூரி மாணவர் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பேரவையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!